districts

img

லயன்ஸ் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா

இராமநாதபுரம்,ஜன.13- இராமநாதபுரம் அடுத் துள்ள சித்தார் கோட்டை கிராமத்தில் பொங்கல் திரு விழா மாவட்ட ஆட்சியர்  ஜானி டாம் வர்கீஸ் தலை மையில் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நடை பெற்ற போட்டியில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிக ளுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கே.ஜே.பிரவீன் குமார், பரமக்குடி சார் ஆட்சி யர் அப்தாப் ரசூல், உதவி ஆட்சியர் (பயிற்சி) வி.எஸ். நாராயண சர்மா மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப் பாளர் மற்றும் அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.  இதில் செய்தி மக்கள் தொ டர்புத்துறையின்  மூலம் அரசின் சாதனைகள் குறித்த புகைப்படக் கண்காட்சியை மாவட்ட ஆட்சித்தலைவர்  ஜானி டாம் வர்கீஸ்  திறந்து வைத்து பார்வையிட்டார். இராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் நகர் மன்ற தலைவர் ஆர்.கே. கார்மேகம் தலைமையில் பொங்கல் விழா நடைபெற் றது. இதில், துணைத்தலை வர் பிரவீன் தங்கம், ஆணை யர் பொறுப்பு ரவீந்திரன், மற்றும் வார்டு உறுப்பினர் கள் மற்றும் நகராட்சி பணி யாளர்கள் கலந்துகொண்ட னர்.  கீழக்கரையில் செய்யது ஹமீதா கலை- அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா நடைபெற்றது. மாணவ, மாணவிகள் பொங்கலிட்டு கொண்டாடினர். இதில் கல் லூரி முதல்வர் சதக்கத் துலா மற்றும் பேராசிரி யர்கள், மாணவ,மாணவி கள் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.  வேலுமாணிக்கம் கலை- அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா வில் முதல்வர், பேராசிரி யர்கள், மாணவ, மாணவி கள்,பணியாளர்கள் கலந்து கொண்டனர்.  முதுகுளத்தூரில் உள்ள ஸ்ரீ கண்ணா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பள்ளியின் நிறுவனர் காந்தி ராசு தலைமையில் பொங்கல் விழா நடைபெற்றது.  தாளா ளர் சந்திரசேகரன், பள்ளி முதல்வர் ஆட்லின் லீமா ஆகியோர் முன்னிலை வைத்தனர். தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர்- கலை ஞர்கள் சங்கத்தின் தாலுகா தலைவர் ஆசிரியர் துரைப் பாண்டியன்  பங்கேற்றார். பள்ளி மாணவ, மாணவி களின் வில்லுப்பாட்டு, ஆசி ரியைகள் கலந்து கொண்ட பட்டிமன்றம் நடைபெற்றது. விழாவில் பெற்றோர்கள் திர ளாக கலந்து கொண்டனர்.