சென்னை, ஜன. 16- பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு தேவா லயங்களில் கிறிஸ்தவர்கள் பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை, மதம், சாதி என எந்த பாகுபாடும் இன்றி கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள இந்துக்கள் மட்டுமின்றி, கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் என அனைத்து மதத்தின ரும், சமத்துவத்தை பேணிக்காக்கும் வித மாக, இந்த பண்டிகையை கொண்டாடு கின்றனர். தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு கிறிஸ்தவ தேவாலயங்களில் கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி மாவட் டத்தில் உள்ள புனித சூசையப்பர் தேவா லயத்தில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்று பொங்கல் விழாவை கொண்டாடினர். அதே போல் நகரின் பல்வேறு பகுதிகளில் பொது மக்கள் வீடுகளுக்கு முன்பு பொங்கல் வைத்து உற்சாகமாக கொண்டாடினர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. முளகுமூடு தூய மரியன்னை தேவாலயத்தில் வண்ண கோல ங்கள் போட்டு, புத்தாடை அணிந்து பானை யில் பொங்கல் வைத்து கிறிஸ்தவர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். சின்ன முட்டம் கடற்கரை கிராமத்தில் மீனவர்கள் தேவாலயம் முன்பு கூடி குடும்பத்துடன் சேர்ந்து கோலமிட்டு, பானைகளில் பொங்க லிட்டு மகிழ்ந்தனர். சமத்துவம் குறித்து தொடர்ந்து பலரும் குரல் கொடுத்துவரும் இந்த காலக்கட் டத்தில், தமிழர்களின் பண்டிகையான பொங்கல் அதற்கு மிகச் சிறந்த சான்றாக உள்ளது என்றால் அது மிகையல்ல.