திருவில்லிபுத்தூர், ஜூன் 30- திருவில்லிபுத்தூர் நகர்மன்ற கூட்டம் நகர்மன்ற தலைவர் தங்கம் ரவிக்கண்ணன் தலைமையில் நடை பெற்றது. கூட்டத்தில் 34 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கவுன்சிலர்கள் பலரும் பொது சுகாதாரம், மோட்டார் பழுது, ஆக்கிரமிப்புகள் அகற்றுதல் குறித்து கேள்வி எழுப்பினர். தலைவர் பதில் கூறுகையில், வார்டுகளில் உள்ள பழு தான மோட்டார்கள் உடனுக்குடன் சரி செய்யப்படும். தற்போது தேரோட்டத் திருவிழா காலமாக இருப்பதால் நிச்சய மாக நான்கு ரத வீதிகளிலும் இன்னும் சில நாட்களில் தேர் பிரச்சனை இன்றி செல்லக்கூடிய வகையில் ஆக்கிர மிப்புகள் அகற்றப்படும்.அதை ஒட்டி வார்டுகளில் இருக்கின்ற ஆக்கிரமிப்பு களையும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அனுமதி இன்றி செயல்படும் இறைச்சிக் கூடங்கள் குறித்து கடந்த கூட்டத்தில் சுகாதார அலுவலரை ஆய்வு செய்ய தலைவர் உத்தர விட்டிருந்தார். இன்றைய கூட்டத்திலும் அது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது உடனடியாக தலையிட்ட நகர் மன்ற தலைவர், சுகாதார அலுவலரை உட னடியாக தலையிட்டு ஆய்வு செய்யுங் கள் .உரிமம் இல்லாத கடைகளை உட னடியாக உரிமம் பெற செய்யுங்கள். மீண்டும் ஆய்வுக்கு செல்லும்போது உரிமம் இல்லாத கடைகள் இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுங்கள் என்று உத்தரவிட்டார்.
ஏழாவது வார்டு கவுன்சிலர் முத்து கிருஷ்ண குமார் என்ற ராஜா மான்சிங், ராமன் அண்ட் கோ என்கிற நிறுவனம் அவுட்சோர்சிங் முறையில் டெண்டர் எடுத்து பணியை மேற்கொண்டு உள்ள னர். அவர்கள் பணியை செய்யும் பொழுது ஏற்கனவே இருந்த தனியார் நிறுவனமும் பணியில் உள்ளது ஏன் பணி செய்ய அனுமதிக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினர் அதற்கு பதில் அளித்த தலைவர் ,ராமன் அண்ட் கோ நிறுவனத்திற்கு 02.05. 2023 அன்றைய தேதிக்கு ஒர்க் ஆர்டர் வழங்கப்பட்டு விட்டது அவர்களுடைய பணி குறித்து தினமும் சுகாதார அலுவலர், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்கள் மூலமாக ஆணையாளருக்கு அறிக்கை வந்துள்ளது அறிக்கை படி இரண்டு முறை சம்பந்தப்பட்ட நிறுவ னத்திற்கு சோகாஸ் நோட்டீஸ் வழங்கப் கட்டுள்ளது. இறுதியாக திங்களன்று சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு மீண்டும் மூணாவது முறையாக சோகாஸ் நோட்டீஸ் வழங்கப்பட உள்ளது இன்னும் ஒரு வாரத்தில் முடிவு தெரியும் என்று கூறினார். கூட்டத்தில் நகராட்சி ஆணையாளர் ராஜமாணிக்கம் நகராட்சி பொறியா ளர் தங்கப்பாண்டியன், நகராட்சி மேலா ளர் பாபு சுகாதார அலுவலர் ராமச்சந்தி ரன் , சுகாதார ஆய்வாளர்கள் சரவணன் மற்றும் கந்தசாமி மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.