சிவகங்கை, ஆக.13- மின்வாரியத்தை பிரித்து தனியார்மயமாக்கக் கூடாது என்று தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு வலியுறுத்தியுள் ளது. சிவகங்கையில் இந்த அமைப்பின் பேரவை மாவட் டத் தலைவர் போஸ் தலை மையில் நடைபெற்றது. இணைச் செயலாளர் ராஜூ கொடியேற்றினார். இணைச் செயலாளர் மருதைராஜ் அஞ்சலி உரையாற்றினார். மாவட்ட உப தலைவர் ஜேசுராஜ் வரவேற்று பேசி னார். மாநில உபதலைவர் சந்திரசேகரன் தொடக்க உரைநிகழ்த்தினார். மாவட் டச் செயலாளர் ஜி.விநாயக மூர்த்தி அறிக்கை சமர்ப் பித்து பேசினார். மாவட்ட பொருளாளர் சுரேஷ்குமார் பேசினார். மாநில இணைச் செயலாளர் சண்முகசுந்த ரம், மண்டல செயலாளர் உமாநாத், செல்லமுத்து, கோவிந்தராஜன், கருணா நிதி, ராமச்சந்திரபாபு, சர் தார், சுப்பிரமணியன், மாரிச் சாமி ஆகியோர் பேசினர். மின்வாரியத்தை பிரித்து தனியார்மயப்படுத்தக் கூடாது.அகவிலைப்படி நிலு வைத் தொகையை உடனே வழங்க வேண்டும். 1.4. 2003க்கு முன்பும், பின்பும் பணியில் சேர்ந்து ஓய்வு பெற்றவர்களுக்கு உயர்நீதி மன்ற தீர்ப்பின் அடிப்படை யில் ஒப்பந்த பணிக் கால த்தை சேர்த்து ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் உள் ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.