மதுரை, பிப்.23- மதுரை மாநகராட்சியின் தொண்டு தொடர்கிறது. ஆனால் மக்கள் பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும். வார்டு ஒதுக்கீட்டு நிதி யை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண் டும் என்று திமுக உள்ளிட்ட அனைத்து மாமன்ற உறுப்பினர் களும் பிப்ரவரி 23 வியாழனன்று நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் வலியுறுத்தினர். திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்று இரண்டாவது ஆண்டு சேவையைத் தொடர்கி றது. அதேபோல் மதுரை மாநக ராட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, பிப்ரவரி 22 புதன் கிழமையுடன் ஓராண்டை நிறைவு செய்து, வியாழனன்று இரண்டா வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதையொட்டி பிப்ரவரி மாத மாமன்றக்கூட்டம் வியாழனன்று மேயர் இந்திராணி தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் டி. நாகராஜன், ஆணையாளர் சிம் ரம்ஜீத் சிங் காலோன், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாமன்ற உறுப்பினர்கள் என்.விஜயா, டி. குமரவேல், வை.ஜென்னியம்மாள் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
வழக்கமான பிரச்சனை... வழக்கமான பதில்
இந்தக் கூட்டத்தில் ஐந்து மண்ட லத் தலைவர்களும் மண்டலம் வாரி யாக பிரச்சனைகளை எடுத்துரைத் தனர். (இவர்கள் அனைவரும் திமுகவினர்). இவர்கள் அனை வரும் வழக்கம்போல், அம்ருத் திட்ட குழாய் பதிப்பு, பாதாளச்சாக் கடைப் பிரச்சனை, தெருவிளக்குப் பிரச்சனை, குடிநீர் தட்டுப்பாடு, பேட்டரி வண்டிகள் ஓடாமல் இருப் பது, நாய்கள் தொல்லை, மாடுகள் தொல்லை, ஊழியர் பற்றாக்குறை, வேலைகள் நடைபெறுவதில் ஏற் படும் தாமதம், சுணக்கம் குறித்து மாமன்ற உறுப்பினர்கள் தொடங்கி மண்டலத் தலைவர்கள் வரை தினந்தோறும் சந்திக்கும் பிரச்சனை களை பட்டியலிட்டனர். வழக்கம் போல் செய்வோம்.. செய்கிறோம்... பார்ப்போம்... நிதி வருகிறது... என மாறி மாறி ஆணையாளரும் மேய ரும் பதிலளித்தனர்.
வெள்ளையறிக்கை வழங்குங்கள்
அதிமுக தரப்பில் பேசிய எம். ராஜா, மாநகராட்சியில் மக்கள் பிரதி நிதிகளாகப் பொறுப்பேற்று ஓரா ண்டை பூர்த்தி செய்துள்ளோம். பொது நிதியிலிருந்து 100 வார்டு களிலும் செய்யப்பட்ட வேலைகள் குறித்த வெள்ளை அறிக்கையை மேயர் வெளியிட வேண்டும். இதன் மூலம் மாமன்ற உறுப்பினர்கள் தங் களது பகுதிகளில் நடைபெற்ற வேலைகளை அறிந்து கொள்ள முடியும் என்றார்.
புறக்கணிக்கும் அதிகாரிகள்: துணை மேயர்
துணைமேயர் நாகராஜன் பேசுகையில் , மதுரை மாநகராட்சி அதிகாரிகள் எங்களைப் புறக்க ணிக்கிறார்கள். மாமன்ற கூட்டக் குறிப்புகள் கூட்டம் நடக்கும் அன்று காலையில் வழங்குவதை தவிர்க்க வேண்டும். முன்கூட்டியே வழங்க வேண்டும். மக்கள் பிரச்சனைகள் குறித்து கடிதம் எழுதினால் அதற்கு எழுத்துப் பூர்வமாக பதி லளிப்பதில்லை. நான் வசிக்கும் மண்டலத்திற்குட்பட்ட பகுதியில் வைக்கப்பட்டுள்ள கல்வெட்டில் துணை மேயர் பெயர் இடம் பெற வில்லை. இந்தப் பிரச்சனைகள் எதிர்காலத்தில் சரி செய்யப்பட வேண்டும் என்றார்.
பெரும் நிறுவனங்களிடம் வரியை வசூலியுங்கள்
துணை மேயர் பேசியதை சுட்டிக்காட்டி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் 23 ஆவது வார்டு கவுன்சிலர் டி.குமரவேல் பேசுகை யில், துப்புரவுத் தொழிலாளர் களுக்கு மாதம் தோறும் 20-ஆம் தேதி சம்பளம் வழங்கினால் அவர் களின் வாழ் நிலை என்னவாகும்? ஒவ்வொரு மாதமும் குறித்த தேதி யில் சம்பளம் வழங்குவதை உறு திப்படுத்த வேண்டும். 100 வார்டு களிலும் பொது நிதியிலிருந்து செய் யப்பட்ட பணிகள் குறித்த விவ ரத்தை மேயர் வழங்க வேண்டும். மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர் களுக்கு குறைவான ஊதியம் வழங்கப்படுகிறது. 10 நாட்கள் விடு முறை எடுத்தால் சம்பளம் பிடிக் கப்படுகிறது. மதுரை மாநகராட்சி வரி வசூலில் ஈடுபட்டுள்ளது நல்ல அம்சம். ஆனால் மிகப்பெரிய மருத்துவமனைகள், கல்லூரிகள் உள்ளிட்ட பெரும் நிறுவனங்கள் பக்கம் செல்லவேயில்லை. குறிப் பாக ரயில்வே காலனியில் உள்ள குடியிருப்புகளில் வரி வசூல் செய்ய வேண்டும். மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ரயில்வே காலனிக்குள் பொது மக்கள் செல்ல தடை விதிக்கின்றனர். இது குறித்து ரயில்வே நிர்வாகத்திடம் பேசி பொதுமக்கள் ரயில்வே காலனி பாதையை பயன்படுத்துவதை உறு திப்படுத்த வேண்டும். வரி வசூலை வெளிப்படைத்தன்மையுடன் நடத்த வேண்டும். பெரும் நிறுவ னங்களிடம் வரி வசூல் செய்ய தனி குழு அமைக்க வேண்டும் என்று தெரிவித்தார். மாநகராட்சியின் தொண்டு தொடர்ந்தாலும் மக்களின் அடிப்ப டைப் பிரச்சனைகளைப் போர்க் கால அடிப்படையில் தீர்க்க வேண் டும் என்று மாமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர்
மாநகராட்சியில் எதிரொலித்த “தீக்கதிர்”
பிப்ரவரி 14 ஆம் தேதி தீக்கதிர் நாளிதழில் “அதிமுக ஆட்சியில் மெத்தனம்... தணிக்கை நிவர்த்தி செய்யப்படாத 4 ஆயிரம் கோடி” என்ற தலைப்பில் மதுரை மாநக ராட்சி குறித்த செய்தி வெளியாகி யிருந்தது. இந்தச் செய்தி வியாழ னன்று நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் எதிரொலித்தது. ஏன் தணிக்கை செய்யப்படவில்லை. இதன் மூலம் மாநகராட்சியின் நிதி ஆதாரத்திற்கு வழியுள்ளது என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. அப்போது திமுக உறுப்பினர் ஒரு வர் வேலையே பார்க்காத தணிக் கையாளருக்கு ரூ. 1 கோடி சம்ப ளமா? 4 ஆயிரம் கோடியை தணிக் கைக்கு உட்படுத்த வேண்டுமென வலியுறுத்தினார். மாநகராட்சியின் சட்டப்பிரிவு என்ன செய்கிறது. மாநகராட்சி யில் சட்டப்பிரிவு முழுமையாக விரைவாக செயல்படுவதன் மூலம் பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியுமென்றார் துணை மேயர் டி.நாகராஜன்.
- பிரபல திரையிசை பின்னணிப் பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் நூற்றாண்டு மார்ச் 24-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி தெற்குவெளி வீதி தவிட்டுச் சந்தையில்-பந்தடி ஏழாவது தெரு சந்திப்பில் டி.எம்.சௌந்தரராஜனின் மார்பளவு சிலை நிறுவப்பட உள்ளது.
- மாநகராட்சி கடந்த இருபது நாட்களில் நாளொன்றுக்கு ரூ.2 கோடி வரி வசூல் செய்துள்ளது. அதிகபட்சமாக ஒரு நாள் ரூ. 5 கோடி வசூலித்துள்ளது. மாநகராட்சியின் கூற்றுப்படி சுமார் ரூ.43 கோடி வசூலாகியுள்ளது.
- துணைமேயர் டி.நாகராஜனின் கூற்றுப்படி, பெரும்பாலும் இது ஏழை எளிய,சாமானிய மக்களிடமிருந்து வரி வசூலிக்கப்பட்டதுதான். இதில் சிலர் வேண்டுமானால் விதி விலக்காக இருக்கக்கூடும். ஏனெனில் மாநகராட்சி பெரிய பெரிய மருத்துவமனைகள், தனியார் கல்வி நிறுவனங்கள் பக்கமே செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- மாமன்ற உறுப்பினர்களுக்கு பணிகளுக்காக ஒதுக்கப்படும் நிதியை ரூ.3 லட்சத்திலிருந்து ரூ. 5லட்சமாக உயர்த்த வேண்டுமென்ற கோரிக்கையை முதலாவது மண்டலத் தலைவர் முன்வைக்க, அவரது கோரிக்கைக்கு ஒட்டுமொத்த மன்றமும் மேசைகளை தட்டி மகிழ்ச்சி தெரிவித்தது.
- ஓடாமல் நிற்கும் (பேட்டரி இல்லாமல்) பேட்டரி வண்டிகளின் பேட்டரிகளை மட்டும் மாற்றுவதற்கு மண்டலத் தலைவருக்கு அதிகாரம் கொடுங்கள் என அப்பாவியாகக் கேட்டார் ஒரு மண்டலத் தலைவர்.
- மன்ற உறுப்பினர்கள் மக்கள் பிரச்சனைகளுக்காக குரல் கொடுக்கும் நிலையில் பாஜக உறுப்பினர் மட்டும் “மாநகராட்சியைக் கலைத்து விடு” என ஒவ்வொரு கூட்டத்திலும் இரண்டு நிமிடம் முழக்கமிட்டு விட்டு மன்றத்திலிருந்து ஓட்டம் பிடிப்பதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.