திருவில்லிபுத்தூர், ஏப்.11- திருவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரம் பேரூராட்சி பகு தியில் ஒடுக்கப்பட்ட மக்கள் வசிக் கும் அக்னி மாரியம்மன் கோவில் உள்ளது. கோவிலுக்கு அருகே சாதி ஆதிக்கப் பிரிவைச் சேர்ந்த தனிநபர் ஒருவர் ஒன்றரை அடி சுவரும் கான்கிரீட் தரைத்தளமும் கட்டி ஒடுக்கப்பட்ட மக்கள் கோவி லுக்கு வந்து வழிபட முடியாத அள விற்கு ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இதனைக் கண்டித்தும் ஆக்கி ரமிப்பை அகற்றக்கோரியும் அப் பகுதி மக்கள் மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் பேரூ ராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. காவல் துறையினர் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தனர். பேச்சு வார்த்தையில் தனிநபர் வாங்கிய நீதிமன்ற உத்தரவை திரும்பப் பெறுவதற்கு உரிய நடவடிக்கை களை உடனடியாக மேற்கொள் வோம். பேரூராட்சித் தலைவர் சம் பந்தப்பட்ட தனிநபருடன் பேசி சுமூகமான முடிவு எடுக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டு ஒப் பந்தம் போடப்பட்டது. தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட துணைத்தலைவர் சசி குமார் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் முன்னணியின் மாவட்டச் செயலாளர் முத்துக் குமார், விவசாயத்தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் ஜோதிலட்சுமி, சிஐடியு சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் திரு மலை, விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் பெருமாள், ஊர் நிர்வாகிகள் தங்கவேல், வன ராஜ், பெரியசாமி, கதிரேசன் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.