districts

img

மதுரையில் மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை, டிச.6- 1.12.2019 முதல் வழங்க  வேண்டிய ஊதிய உயர்  வினை உடனே வழங்க வேண்டும். அவுட் சோர்சிங்  என்ற பெயரில் தனியார் மயத்தை புகுத்தக்கூடாது, 58 ஆயிரத்துக்கு மேற்பட்ட காலிப்பணியிடங்களை உடனே நிரப்பி மின் விபத்து களை தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி தமிழ்நாடு மின் ஊழி யர் மத்திய அமைப்பு (சிஐ டியு) மதுரை கிளை சார்பில் கோ.புதூர் தலைமைப் பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் திருமுரு கன் தலைமை வகித்தார்.  மாவட்டச்  செயலாளர் செல்வராஜ், பொருளாளர் சுரேஷ்குமார், இணைச் செயலாளர் மாயத்தேவன், மதுரை  மாநகர் செயலாளர் அறிவழகன், பொருளாளர் குழந்தைவேல் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பேசினர்.