மதுரை, ஜூலை 11- தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மதுரை கிளை யின் 19 ஆவது மாவட்ட மாநாடு மாவட்டத் தலைவர் ஆர். மாரிச்சாமி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட இணைச் செயலாளர் வி. சுந்தரராஜன் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாவட்ட துணைத் தலை வர் கே. ஜீவானந்தம் வரவேற்று பேசி னார். மாநில துணைப் பொதுச் செய லாளர் வி. பிச்சைராஜன் துவக்கவுரை யாற்றினார். மாவட்டச் செயலாளர் ஆர். சர்தார்பாட்சா, பொருளாளர் ஆர். பால்ராஜ் ஆகியோர் அறிக்கைகளை சமர்ப்பித்தனர். தோழமைச்சங்க நிர்வாகிகள் அ. பால்முருகன், சு. கிருஷ்ணன், ஆர். தேவராஜ், டி. அறி வழகன் ஆகியோர் வாழ்த்திப் பேசி னர். சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ். கணேசன் நிறைவுரையாற்றினார். மாவட்ட துணைத் தலைவர் எம். பிச்சை நன்றி கூறினார். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்திட வேண்டும். மின்துறை யை தனியார்மயமாக்கும் போக்கை ஒன்றிய- மாநில அரசுகள் கைவிட வேண்டும் மின்துறை பொதுத்துறை யாகவே நீடித்திட வேண்டும் . மின்சார சட்ட திருத்தம் 2022 ஐ கைவிட வேண்டும். என்பன உள்ளிட்ட பல் வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.