districts

img

மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை, ஜன.31- கேங்மேன் பணியாளர்களை கள உதவி யாளர்களாக பணி மாற்றம் செய்ய வேண்டும். கேங்மேன் பணியாளர்கள் சொந்த மாவட்டங்களுக்கு செல்ல ஊர் மாறுதல் உத்தரவு வழங்க வேண்டும். முத்த ரப்பு ஒப்பந்தப்படி பயிற்சி காலத்தை மூன்று மாதமாக குறைத்து அன்றைய தேதி யில் இருந்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மதுரை  மற்றும் மதுரை புறநகர் வட்டக் கிளைகள்  சார்பில் மதுரை புதூர் மேற்பார்வை பொறி யாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மதுரை திட்ட தலை வர் எஸ்.திருமுருகன் தலைமை வகித்தார். துவக்கி வைத்து சிஐடியு மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் கே.அரவிந்தன் பேசி னார். மதுரை மின் திட்டச் செயலாளர் சி.செல்வராஜ், பொருளாளர் சுரேஷ்குமார், மதுரை மாநகர் திட்டச் செயலாளர் டி.அறி வழகன், ஜிசிசி கிளை செயலாளர் ஜெய காந்தன், சிஐடியு மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் இரா.லெனின், ஆகியோர் விளக்கிப் பேசினர்.