திண்டுக்கல்லிற்கு வருகை தந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணனிடம் பழனி நகர்மன்ற துணைத்தலைவராக தேர்வுசெய்யப்பட்டுள்ள கே.கந்தசாமி சால்வை அணிவித்து வாழ்த்துப் பெற்றார். மாநிலக்குழு உறுப்பினர் என்.பாண்டி, மாவட்டச் செயலாளர் ஆர்.சச்சிதானந்தம் ஆகியோர் உடனிருந்தனர்.