districts

துணை ஆய்வாளர் தேர்வுக்கு இ லவச பயிற்சி: மாவட்ட ஆட்சியர் தகவல்

நாகர்கோவில், ஏப்.5- கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் மா.  அரவிந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வா ணையத்தால் நடத்தப்படவுள்ள துணை ஆய்வாளர் பணிக்காலியிடங்களுக்கான போட்டி தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்பு நாகர்கோவிலில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழி காட் டும் மையத்தில் நடத்தப்படவுள்ளது. இல வச பயிற்சி வகுப்பு ஏப்ரல் 6 முதல் தொடங்குகிறது. திங்கள் முதல் வெள்ளிக் கிழமை வரை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அலுவலக வேலை நாட்களில் இந்த பயிற்சி நடைபெற இருக்கிறது. இந்த பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் மாணவர்கள் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழி காட்டும் மையத்திற்கு வந்து தன்னார்வ பயிலும் வட்ட உறுப்பி னராக பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு 94990 55932 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை யின் https://tamilnadudicerservices.tn.gov.in என்ற இணைய தளத்தில் அனைத்து விதமான போட்டி தேர்வுக ளுக்கு பாடக்குறிப்பு கள் மற்றும் இணை யதள மாதிரி தேர்வுகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கை யில் கூறியுள்ளார்.