districts

img

நள்ளிரவில் வீடு முன்பு நிறுத்திய பைக்குகளுக்கு தீ வைப்பு

வேடசந்தூர், அக்.5- திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள  எரியோட்டில் துரைச்சாமிநாடார் தெருவில் வசித்துவரும் கார்த்திக் என்பவர் மதுரை தனியார் கல்லூரியில் பேராசி ரியராக பணியாற்றி வருகிறார். இவர்   தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை  நிறுத்திவிட்டு தூங்கிவிட்டார். இதே போல பன் வியா பாரி முருகன் என்பவர் வியாபாரத்தை முடித்துவிட்டு இரவு  வீட்டின் அருகே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு தூங்கி விட்டார். நள்ளிரவில் மர்மநபர்கள் கார்த்திக்  மற்றும் முருக னின் இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்தனர்.  அக்கம்  பக்கம் இருந்தவர்கள் ஓடி வந்து தண்ணீரை ஊற்றி தீயை  அணைத்தனர். ஆனால் இரு மோட்டார் சைக்கிளும் தீப்  பிடித்து எரிந்து முற்றிலும் கருகியது. இது குறித்து புகாரின் பேரில் எரியோடு காவல் ஆய்வா ளர்  சத்தியபிரபா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி  வருகிறார்.

;