மதுரை, பிப்.7- மனித உயிர்களை விட ஆன்-லைன் ரம்மி சூதாட்டம் முக்கியம் என்று கருதுவது ஆபத் தான, அழுகிய சிந்தனையாகும். அழு கிய சிந்தனையின் வெளிப்பாட்டில் சேலத் தைச் சேர்ந்த 26 வயது இளைஞர் ஆன்-லைன் ரம்மியில் பணத்தை இழந்து ஞாயி றன்று மதுரையில் உயிரை மாய்த்துக் கொண்டார். சேலம் மாவட்டம் அரிசிபாளையம் முள்ளாகாடு தமணன்சாலை பகுதியைச் சேர்ந்தவர்கள் மகாலட்சுமி-முத்துராமன் தம்பதியினர். இவர்களுக்குக் குணசீலன் (26), பசுபதி (25), கமல் (23) மகன்கள் உள்ள னர். மூன்று பேரும் சிறு வயதாக இருக்கும் போது அதாவது, 16 வருடங்களுக்கு முன்பு தாய் மகாலட்சுமி உயிரிழந்த நிலையில் தந்தை முத்துராமன் வேறொரு திருமணம் செய்து தனியாக வசித்துவந்துள்ளார். மூன்று பேரையும் பாட்டி தமிழரசி வளர்ந்து வந்துள்ளார். இவர்களில் குண சீலன் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வந்துள்ளார். அப்போது செல்போனில் ஆன்லைன் ரம்மி விளையாடத் தொடங்கிய அவர் கல்லூரிக்குக் கட்டும் பணத்தைக் கட்டாமல் விளையாட்டில் இழந்துள்ளார். படிப்பைத் தொடர முடியாத அவர் மதுரை அண்ணா பேருந்து நிலையம் பகுதியில் உள்ள நியூ மாஸ் என்ற உணவகத்தில் கடந்த ஒரு வருடமாகப் பணியாற்றி வந்துள்ளார் பணிக்குச் சேர்ந்தார். தொடர்ந்து விளை யாட்டில் பணத்தை இழந்துள்ளார். கிட்டத் தட்ட ரூ. 2 லட்சத்தை இழந்த அவர் மதுரை சாத்தமங்கலத்தில் தாம் தங்கியிருந்த வீட்டில் ஞாயிறன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருநெல்வேலி
2023-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திரு நெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே உள்ள ஸ்ரீ ரகுநாதபுரத்தைச் சேர்ந்த சிவன்ராஜா (34) ஆன்-லைன் ரம்மியில் சுமார் ஒரு லட்சம் ரூபாயை இழந்த நிலை யில் ரோஸ்மியாபுரம் அருகே உள்ள செங் கல் சூளையில் விஷம் குடித்தார். மருத்து வமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் உயிரிழந்தார் என்பது கவனிக்கத்தக்கது. 2022-ஆம் ஆண்டு டிசம்பர் 16-ஆம் தேதி தமிழக அமைச்சர் தெரிவித்த தகவல் அடிப்படையில் ஆன்-லைன் ரம்மிக்கு 25 பேர் பலியாகியுள்ளனர். 2023-ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வ தகவல்களின் படி இருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியால் தொடர்ந்து தற்கொலை அதிகரித்து வரு கிறது. தமிழக அரசு ஓய்வு பெற்ற உயர்நீதி மன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு தலை மையில் இந்தச் சூதாட்டம் குறித்து ஆய்வு செய்து அறிக்கையளிக்கப் பணித்தது. அவர் அளித்த அறிக்கையின் அடிப்படை யில் தமிழகத்தில் நிகழும் தற்கொலை களைத் தடுக்க ஆன்-லைன் சூதாட்டத்தைத் தடுப்பதென அரசு முடிவு செய்தது. இது தொடர்பான கோப்பினை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைத்துள்ளது. இதுவரை அவர் ஒப்புதல் அளிக்கவில்லை. அவரது பிடிவாதம் தொடரும் நிலையில் மதுரையில் குணசீலன் தற்கொலை செய்து கொண்டார். மனித உயிர்களை விட ஆன்லைன் ரம்மி சூதாட்டம் முக்கியம் என்று கருது வது ஆபத்தான, அழுகிய சிந்தனையாகும்.