போதையற்ற தமிழ்நாடு 1கோடி கையெழுத்துக்கள் பெறும் இயக்கம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியம் கருமாத்தூர் புனித கிளாரட் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் போதைக்கு எதிராக உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் அருட்தந்தை சூசை மாணிக்கம் கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார். 1300 மாணவர்கள் கையெழுத்திட்டனர். இதில் செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் ஜெயபிரகாஷ், ஒன்றிய தலைவர் ஜெ.ஸ்டாலின், மாவட்ட செயலாளர் பி.தமிழரசன், மாவட்ட பொருளாளர் எஸ்.பாலகிருஷ்ணன், மாவட்ட துணைச்செயலாளர் திருதரன், இந்திய மாணவர் சங்க மத்தியக்குழு உறுப்பினர் கே.பிருந்தா ஆகியோர் பேசினர்.