சின்னாளபட்டி,ஜூன் 30- திணடுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றி யம் கொத்தப்புள்ளி ஊராட்சி க்கு உட்பட்ட தாதன்கோட் டையில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறு தித்திட்ட நிதி ரூ.12.45 லட்சம் மற்றும் கதிரனம்பட்டியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.13லட்சம் மதிப்பில் இரண்டு புதிய அங்கன்வாடி மையங்கள் கட்டப்பட்டன. இதன் திறப்பு விழாவிற்கு ரெட்டியார்சத்திரம் ஒன்றிய பெருந்தலைவரும், தெற்கு ஒன்றிய திமுக செயலாள ருமான ப.க.சிவகுருசாமி தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சி முகமை மாவட்ட திட்ட இயக்குநர் திலகவதி, கொத்தப்புள்ளி ஊராட்சிமன்ற தலைவர் சுந்தரி அன்பரசு, தலைமை செயற்குழு உறுப்பினர் மாவட்ட பொருளாளர் கு.சத்தியமூர்த்தி, ஒன்றிய துணைப் பெருந்தலைவர் ராஜேஸ்வரி தமிழ்ச்செல் வன், கொத்தப்புள்ளி ஊராட்சிமன்ற துணைத் தலைவர் எம்.வி.ரெங்கசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர் அமுதவள்ளி ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அங்கன்வாடி மையங்க ளை திறந்து வைத்து,
பொது மக்கள் மத்தியில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேசியதாவது: திமுக ஆட்சியின் போது இப்பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் நியாயவிலைக்கடைகள் திறக்கப்பட்டன. கடந்த 12 வருடங்களுக்கு முன்பு திமுக ஆட்சியின் போது கொண்டுவரப்பட்ட காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் தற் போது ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் முழுவதும் உள்ள கிராம ஊராட்சிகள் பயன்பெறும் வகையில் ரூ.250 கோடி மதிப்பில் விரிவு படுத்தப்பட்டு வருகிறது. தற்போது ரெட்டியார் சத்திரம் ஒன்றியத்தில் மலை கிராமங்கள் நீங்கலாக ஊராட்சிகளில் 196 மேல் நிலை தண்ணீர் தொட்டிகள் புதிதாக கட்டப்பட்டு பொது மக்களுக்கு குடிதண்ணீர் விநியோகம் செய்ய நடவ டிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது. இதன் மூலம் தினசரி பொதுமக்கள் குடிதண்ணீ ரை பெறும் நிலைமை உரு வாகும். 100 நாள் சம்ப ளத்தை ரூ.290 முதல் 300 வரை உயர்த்த தமிழக முதல்வர் நட வடிக்கை எடுத்து வருகிறார். இவ்வாறு அமைச்சர் கூறினார். தாசில்தார் நவநீத கிருஷ்ணன், மாவட்ட கவுன் சிலர் சுப்புலெட்சுமி சண் முகம், வட்டார வளர்ச்சி அலு வலர்கள் மலரவன், கிருஷ்ணன், மற்றும் பலர் கலந்துகொண்டனர்.