districts

மதுரை முக்கிய செய்திகள்

ரயில்வே துறைக்கு அமைச்சரை தமிழக அரசு நியமிக்க  டிஆர்இயு கோரிக்கை

மதுரை, டிச.8-  தமிழகத்தில் உள்ள ரயில்வே இருப்பு பாதையின் மொத்த நீளம் சுமார் 5952 கி.மீ. 532 ரயில்வே நிலை யங்கள் உள்ளன. ரயில்வே திட்டங்களை விரைவில் நிறை வேற்றவும், ரயில்வே திட்டங்களுக்கு நிலம் ஆர்ஜிதம் செய்ய உதவும்,ஒன்றிய அரசுக்கும் தமிழகத்திற்கும் பால மாக தமிழக அமைச்சரவையில் ரயில்வே துறைக்கு என  ஒரு அமைச்சரை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிய மனம் செய்ய வேண்டும் என்று தட்சிண ரயில்வே எம்ப்ளா யிஸ் யூனியன் (டிஆர்இயு) கோரிக்கை விடுத்துள்ளது.  1257 கி.மீ நீளம் ரயில்பாதை இருக்கும் கேரள மாநி லத்தில் சுமார் 178 ரயில்நிலையங்கள் உள்ளன. கேரள  மாநில ரயில்வே திட்டங்களை கண்காணிக்கவும்,  விரைந்து முடிக்கவும் கேரள அமைச்சரவையில் வி.  அப்துல்ரஹிம் என்பவரை இடது ஜனநாயக முன்னணி தலைமையிலான முதல்வர் பினராயி விஜயன் அரசு நியமித்துள்ளது. அதே போல கேரள மாநிலத்தை விட  அதிக தூரம் உள்ள ரயில்வே பாதை மற்றும் ரயில் நிலை யங்கள் உள்ள தமிழக மக்கள் நலன் கருதி ஒரு அமைச்  சரை தமிழக அரசு விரைவில் நியமனம் செய்ய வேண்டும் என்று மதுரை கோட்ட டிஆர்இயு இணைச்செயலாளர் ரா.சங்கரநாராயணன் தெரிவித்துள்ளார்.

கொடைரோடு அருகே  விபத்தில் இளைஞர் பலி 

சின்னாளப்பட்டி, டிச.8- சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையைச் சேர்ந்த வர்கள் திவாகர் (25),பழனி (17) . இவர்கள் இருசக்கர  வாகனத்தில் திருப்பூர் சென்றனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே நான்குவழிச்சாலை அம்மைய நாயக்கனூர் மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற சரக்கு வாகனத்  தின் மீது பலமாக மோதியது.இதில் இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து வந்த திவாகர் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இரு சக்கர வாகனத்தை ஓட்டிவந்த பழனி பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் திண்டுக்கல் அரசு  மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக் கப்பட்டுள்ளார்.

காலமானார்

திண்டுக்கல், டிச.8- திண்டுக்கல் முன்னாள் நகர்மன்றத் தலைவரும் முன்னாள் திமுக நகர் கழகச் செயலாளர் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினருமான ம.பசீர் அகமது கால மானார். சிபிஎம் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.பால பாரதி, மாநிலக்குழு உறுப்பினர் என்.பாண்டி, மாவட்டச்  செயலாளர் ஆர்.சச்சிதானந்தம் மற்றும் பலர் அவரது உட லுக்கு அஞ்சலி செலுத்தினர்.

விருதுநகரில்  6 பவுன் நகை திருட்டு

விருதுநகர், டிச.8- விருதுநகர் அருகே 116 காலனியில் பூட்டிய வீட்டிற்குள் இருந்த 6 பவுன் தங்க நகை திருடு போனது. விருதுநகர் அருகே உள்ளது 116 காலனி. இப்பகுதி யைச் சேர்ந்த திருப்பதி மனைவி காளீஸ்வரி(29). இரு வரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்ற னர். இந்நிலையில், வீட்டைப் பூட்டி விட்டு வெளியே காளீஸ்வரி சென்றாராம். திரும்பி வந்து பார்த்த போது, பீரோவில் இருந்த 5பவுன் தாலி செயின்,3 மோதி ரங்கள் மற்றும் ரொக்கம் ரூ.500 ஆகியவற்றை காண வில்லையாம். எனவே, இதுகுறித்து காளீஸ்வரி, கிழக்கு  காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீ சார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தேனியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்: 5 பேர் கைது

தேனி, டிச.8- தேனி அல்லிநகரத்தில் கஞ்சா விற்ற , 5 பேரை கைது  செய்த காவல்துறையினர் 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தேனி அல்லிநகரம், வெங்கலாகோயில் தெருவைச்  சேர்ந்தவர்கள் கோபிநாத்(28), ராஜா(27), முத்துராஜ்(20), அம்பேத்கர் தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் குமார்(30), கணபதி நகரைச் சேர்ந்தவர் மணிமுத்து(19). இவர்கள் அல்லிநகரம், பாண்டியன் நகர் பகுதியில் கஞ்சா விற்று  கொண்டிருந்ததாக மதுரை ஐ.ஜி.,தனிப் படை போலீ சார் கைது செய்தனர்.  இவர்களிடமிருந்து 12 கிலோ எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள், கஞ்சா விற்ற தொகை ரூ.14,200, கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய 2 இருசக்கர வாகனங்கள் பறி முதல் செய்யப்பட்டது. கஞ்சா விற்ற 5 பேர் மீது அல்லி நகரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தனர். இவர்களுக்கு மொத்த விலைக்கு கஞ்சா விற்றதாக தேவா ரத்தைச் சேர்ந்த பாண்டி, சத்திரப்பட்டியைச் சேர்ந்த சாந்தா மணி, செல்வம் ஆகியோரை தேடி வருகின்றனர்.

முயலை வேட்டையாடும்  சிறுத்தை காட்சி  சமூக வலைதளங்களில் பரவியது

திருநெல்வேலி, டிச.8- விக்கிரமசிங்கபுரம் மேற்கு தொடர்ச்சி மலையடி வாரத்தில் திருப்பதியாபுரம், செட்டிமேடு, வேம்பையா புரம், அனவன் குடியிருப்பு ஆகிய கிராமங்கள் உள்ளன.  வனப்பகுதியில் இருந்து அவ்வப்போது வெளியே றும் சிறுத்தை, கரடி, மிளா, யானை, காட்டு பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் இந்த கிராமங்களுக்குள் நுழைந்து விளைநிலங்களை சேதப்படுத்துவது உண்டு. மேலும் சிறுத்தையானது வளர்ப்பு பிராணிகளான நாய், ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட வீட்டு விலங்குகளையும் வேட்டையாடிச் செல்கின்றன. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மலையடிவாரப் பகுதியில் சிறுத்தை ஒன்று, முயலை வேட்டையாட துரத்திச் சென்றுள்ளது. இதை அப்பகுதி யில் நின்ற இளைஞர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ காட்சியானது சமூக  வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மதுரை வைகை ஆற்றில் அழுகிய  நிலையில் சடலம் மீட்பு

மதுரை, டிச.8-   மதுரை வைகை தென்கரை என்.எஸ்.கே. வீதி கருமாரியம்மன் கோவில் 3 ஆவது தெரு, பாண்டி அலுமினிய பட்டறை அருகே உள்ள வைகை ஆற்றில் 65 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதந்து வந்  தது. இதனை மேற்கு வட்டம் மேல்மதுரை கிராம உதவியாளர் பால்பாண்டியன் ,கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் ரோந்து வந்து  போது பார்த்தனர்.பின்னர் அப்பகுதி மக்களின் உதவியுடன் சடலத்தை மீட்ட னர். கருப்பு,சிவப்பு,வெள்ளை கட்டம் போட்ட சட்டை அணிந்த இவர் யார் என்  பது குறித்த விபரம் தெரியவில்லை. இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் அளித்த  புகாரின்பேரில் கரிமேடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வரு கின்றனர்.   இவர் குறித்த விபரம் தெரிந்தவர்கள் கரிமேடு காவல் ஆய்வாளரின் தொலை பேசி எண் 94981 61868 மற்றும் கரிமேடு காவல்நிலைய தொலைபேசி எண் 94981  01379 ஆகிய எண்களில் தகவல் தெரிவிக்கு மாறு காவல் ஆய்வாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.

போடி அருகே புதிய காவல் நிலையம் அமையவுள்ள இடத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்

தேனி, டிச.8-  போடி அருகே புதிய காவல் நிலையம்  அமைக்க கையகப்படுத்திய இடங்களில் இருந்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. போடி தாலுகா காவல் நிலையம் போடி  நகரில் அமைந்துள்ளது. இந்த காவல் நிலை யத்திற்குட்பட்ட கிராமங்கள் தெற்கில் ரெங்கநாதபுரம், தருமத்துப்பட்டி, சில்ல மரத்துப்பட்டி, சிலமலை, ராசிங்காபுரம், பொட்டிப்புரம், முத்தையன்செட்டிபட்டி, நாகலாபுரம், சங்கராபுரம், எஸ்.தரு மத்துப்பட்டி வரையிலும் கிழக்கில் போடி மீனாட்சிபுரம், விசுவாசபுரம், துரைராஜபுரம் காலனி, அணைக்கரைப்பட்டி வரையிலும் அமைந்துள்ளது. இந்த கிராம மக்கள் போடி தாலுகா காவல் நிலையத்திற்கு வரு வதற்கு 2 கி.மீ. முதல் 25 கி.மீ. தூரம் வரை வரவேண்டியுள்ளது. இந்த கிராமங்களில் பிரச்சனை ஏற்பட்டாலும் போடி தாலுகா போலீஸார் நிகழ்விடங்களுக்கு செல்வ தற்கு தாமதம் ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு இந்த கிரா மங்களுக்கு மையப் பகுதியான சிலமலை பகுதியில் புதிய காவல் நிலையம் அமைக்க தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிர வீன் உமேஷ் டோங்கரே, தேனி மாவட்ட  ஆட்சியர் க.வீ.முரளீதரன் ஆகியோர் நட வடிக்கை எடுத்தனர். இதற்காக சிலமலை  ராணிமங்கம்மாள் சாலை தொடங்கு மிடத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டது. போடி தாலுகா காவல் நிலையத்துடன் புதி ததாக போடி போக்குவரத்து காவல் நிலை யத்திற்கும் இடம் தேர்வு செய்யப்பட்டது. இந்த இடங்களை கடந்த வாரம் போடி வட்  டாட்சியர் அ.ஜலால் தலைமையில் வரு வாய்த்துறையினர் ஆய்வு செய்த நிலை யில் இந்த இடங்களில் சில தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்திருந்தது தெரிந்தது. இதனையடுத்து இந்த ஆக்கிரமிப்பு களை அகற்ற உரிய அறிவிப்பு வழங்கிய நிலையில் வியாழக்கிழமை போலீஸார் பாதுகாப்புடன், வருவாய்த்துறையினர் ஜே.சி.பி. இயந்திரங்கள் மூலம் ஆக்கிர மிப்புகளை அகற்றி இடங்களை கையகப்  படுத்தினர். இந்த இடங்களில் போடி தாலுகா காவல் நிலையம், போடி போக்குவரத்து காவல் நிலையம் அமைக்க உரிய திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பி அனுமதி மற்றும் நிதி கிடைத்தவுடன் கட்டு மான பணிகள் தொடங்கப்படும் என காவல்  துறையினர் தெரிவித்தனர்.

சிபிஎம் போராட்ட அறிவிப்பால்  ஒரு மணி நேரத்தில் கிடைத்த சான்றிதழ்

வெம்பக்கோட்டை, டிச.8-  விருதுநகர் மாவட்டம், வெம்பக் கோட்டை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் காத்திருப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து 18 மாதங்க ளாக கிடைக்காத வாரிசு சான்றிதழ் ஒரு மணி நேரத்தில் கிடைத்தது. சிவகாசி வட்டம், வெம்பக்கோட்டை ஒன்றியத்திற்கு உட்பட்டது ரெங்க சமுத்திரப்பட்டி. இப்பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் கடந்த 2021 ஜனவரியில் இறந்துவிட்டார். எனவே, இவரது மகள் முத்து என்பவர் வாரிசு சான்றிதழ் கோரி இணையதளம் மூலம் விண்ணப்பித்தார். இதையடுத்து, விண்ணப்பம் தள்ளுபடி  செய்யப்பட்டது. தொடர்ந்து பலமுறை முத்து விண்ணப்பித்த போதும், வாரிசு  சான்றிதழ் வழங்காமல் எம்.துரைச்சாமி புரம் கிராம நிர்வாக அலுலவர் சுதர்சனன் தள்ளுபடி செய்து வந்துள்ளார். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களிடம் முத்து தெரி வித்தார். இதையடுத்து, சான்றிதழ் வழங்கக் கோரியும், கிராம நிர்வாக அலுவலர் மீது  நடவடிக்கை எடுக்கக்கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் டிசம்பர் 8 அன்று காத்திருப்பு போராட்டம் நடத்து வது என அறிவிக்கப்பட்டது. தகவலறிந்து சிவகாசி வட்டாட்சியர் லோகநாதன், சிபிஎம் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்பு, இணை யதளம் மூலம் விண்ணப்பிக்க கோரியும் வேண்டுகோள் விடுத்தார். அதன்படி, இணையதளம் மூலம் வாரிசு சான்றிதழ் வழங்கக் கோரி விண்ணப்பிக்கப்பட்டது. பின்பு, ஒரு மணி நேரத்தில் சான்றிதழ் கிடைத்தது. இது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கிடைத்த வெற்றியாகும். முன்னதாக நடைபெற்ற போராட் டத்திற்கு மாரிமுத்து தலைமையேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.குரு சாமி, ஒன்றிய செயலாளர் எம்.முனிய சாமி, பா.கண்ணன் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.

கலைவிழாவிற்கு மாணவர்களை திறந்தவெளி வாகனத்தில் அழைத்துச் செல்வதா?  மாணவர் சங்கம் கண்டனம்

திண்டுக்கல்,டிச.8- திண்டுக்கல்லில் உள்ள புனித வளனார் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கான கலை விழா வியா ழனன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்காக பள்ளி மாண வர்களை திறந்தவெளி வாகனத்தில் அழைத்துச் சென்ற தற்கு இந்திய மாணவர் சங்கம் கண்டனம் தெரி வித்துள்ளது.  இதுகுறித்து சங்கத்தின் திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் முகேஷ் விடுத்துள்ள அறிக்கையில், மாண வர் கலை விழாவிற்கு முறையாக வாகனம் ஏற்பாடு  செய்து அழைத்து சென்றிருக்க வேண்டும். அப்படி  செய்யாமல் திறந்த வெளி வாகனத்தில் ஆடு மாடு களைப் போல அழைத்துச் சென்றது கண்டிக்கத்தக்கது. மாணவர்களுக்கு உணவு, தண்ணீர் முறையாக வழங்கப்படவில்லை.நிகழ்ச்சியில் பங்கேற்ற பாதிக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட வில்லை. ஒரு பெரிய நிகழ்ச்சி நடத்தும் போது அரசு  அதிகாரிகள் ,கல்வித்துறை அதிகாரிகள் இதில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.இது போன்ற தவறுகள் மீண்டும் நடக்காத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

கைதிக்கு செல்போன்: சிறை வார்டன் சஸ்பெண்ட் 

திருநெல்வேலி, டிச. 8- பாளையங்கோட்டை மத்திய சிறையில் 319 ஆயுள் தண்டனை கைதிகள், 114 தண்டனை கைதிகள், 405 விசாரணை கைதிகள்,  குண்டர் சட்டத்தில் கைது  செய்யப்பட்ட 297  கைதிகள், தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஒரு கைதி, தூக்கு தண்டனை கைதி ஒருவர், 4 திருநங்கைகள், முதல்வகுப்பு கைதிகள் 3 பேர்  என மொத்தம் 1,144 கைதிகள் உள்ளனர். சிறையில் தடை செய்யப்பட்ட செல்போன் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைதிகளுக்கு தாராளமாக கிடைப்பதாக உயர் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மேலும் சிறையில் இருந்தே கைதிகள் செல்போனில் தொடர்பு கொண்டு வெளியில் குற்ற சம்பவங்களை அரங்கேற்றுவதாக புகார் எழுந்தது.  இதையடுத்து சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி உத்தர வின்பேரில், பாளையங்கோட்டை மத்திய சிறையில் சிறைத்துறையினர், போலீசார் இணைந்து அதிரடி சோதனை நடத்தினர். இதில் சிறையில் ஒரு கைதி செல்போன் பயன்படுத்தியது தெரிய வந்தது. அந்த செல்போனை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி விசாரணை நடத்தினார். விசாரணையில், சிறையில் கைதி செல்போன் பயன் படுத்துவதற்கு வார்டன் அருண் பாண்டியன் உதவியது தெரியவந்தது. எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்கு மாறு சிறைத்துறை டி.ஜி.பி.க்கு அறிக்கை தாக்கல் செய்தார். இதையடுத்து பாளையங்கோட்டை மத்திய சிறை வார்டன் அருண் பாண்டியனை பணியிடைநீக்கம் செய்து சிறைத்துறை டி.ஜி.பி. அம்ரேஷ் புஜாரி உத்தரவிட்டார்.