districts

img

நீட் தேர்வை எதிர்த்து மதுரை, தேனியில் திராவிடர் கழகம் பிரச்சாரம்

தேனி, ஏப்.7- மதுரை, தேனியில் திராவிடர்  கழகம் சார்பில், ‘நீட்’ தேர்வு எதிர்ப்பு, புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு பிரச்சார பொதுக்கூட்டம் நடை பெற்றது.  தேனியில் நடைபெற்ற கூட் டத்திற்கு மாவட்ட தலைவர் ச. ரெகுநாகநாதன் தலைமை வகித்தார். திராவிடர் கழக தலை வர் கி.வீரமணி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் திமுக தேனி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.முருகன், சிபிஐ மாவட்ட நிர் வாகி பெத்தாட்சி ஆசாத், திரா விடர் கழக மாவட்ட செயலாளர் மணிகண்டன், விடுதலை சிறுத் தைகள் கட்சி தேனி நாடாளு மன்ற தொகுதி செயலாளர் தமிழ் வாணன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மதுரை  மதுரை செல்லூர் பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் முருகானந்தம் தலைமை தாங்கினார்.  கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசுகை யில், மாநில வளர்ச்சி வேண்டாம் எனக் கூறும் விந்தையான ஆளு நரை தமிழகம் பெற்றிருக்கிறது. தமிழக முதலமைச்சர் ஆளுநரி டம் நாகரீகமாக, கடமை, கட்டுப்பாடு என்ற கோட்பாட்டின் அடிப்படையில் கோரிக்கை களை முன்வைத்து வருகிறார். ஆளுநர், ஒன்றிய அரசால் நிய மிக்கப்பட்டவர். தமிழக மக்களின் கொள்கை முடிவுகளில் மக்கள் பிரதிநிதி கூறுவதை கேட்ட வேண்டும். ஆனால், ஆளுநர்  அவ்வாறு செயல்படாமல் தன் னிச்சையாக செயல்படுகிறார் என்று விமர்சித்தார. கூட்டத்தில் திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் பொன்.முத்துராமலிங்கம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி. வேலுச்சாமி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாநிலக்குழு உறுப்பி னர் இரா.விஜயராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜா.நர சிம்மன், பகுதிக் குழு செயலா ளர்கள் வி.கோட்டைச்சாமி, ஏ. பாலு, மாவட்டக் குழு உறுப்பி னர்கள் பி.ராதா, கே.அலாவுதீன், மாமன்ற உறுப்பினர் டி.குமர வேல், காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவர் கார்த்திகேயன் உள் ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.