தேனி, செப்.3- தேனி மாவட்டத்தில் ஒன்பது பேருக்கு மாநில அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டுள்ளது. தொடக்கக் கல்வித்துறை சார்பில் போடி பங்கஜம் நடுநிலைப்பள்ளி இடை நிலை ஆசிரியர் ரா.உமா பிரியா, பொன் னம்மாள்பட்டி ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஆ. லிங்கப்பன், கோம்பை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் எம்.எஸ்.சேகர், ஊஞ்சாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரி யர் த.தயாளன் ஆகிய நால்வருக்கும் கிடைத்துள்ளது. பள்ளிக் கல்வித்துறை சார்பில் பாலக் கோம்பை அரசு மேல்நிலைப்பள்ளி முது கலையாசிரியர் செ.வனிதாதேவி, வெள்ளையம்மாள்புரம் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் மு.மணிமொழி, ஸ்ரீரெங்கபுரம் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கா.உஸ்மான்அலி, தேனி நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி கைத்தொழில் ஆசிரி யர் அ.ஜெயராஜ்,ஆகியோருக்கும் மெட்ரிக் பள்ளி சார்பில் போடி ஹாஜி கே.எல்.கே.எஸ். அப்துல்ரசாக் இன்டர் நேஷனல் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி முதல்வர் அ.ஆயிஷா அம்மாள் ஆகி யோர் விருதாளர்களாக அறிவிக்கப் பட்டுள்ளனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் காளையார் கோயில் கிழக்கு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தாமஸ் அமலநாதன், ஆசிரியர் ரமேஷ்குமார், ஆசிரியர் குழந்தைசாமி ஆகியோர் டாக்டர் ராதா கிருஷ்ணன் விருதாளர்களாக அறிவிக்கப் பட்டுள்ளனர். மூன்று பேரையும் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டி பாராட்டி வாழ்த்தினார்.