மதுரை,மார்ச் 10- நுகர்பொருள் வாணிபக் கழகத்தை தனியார்மயமாக்கக்கூடாது .நெல் கொள் முதல் நிலையங்களில் தேங்கியுள்ள மூட்டைகளை உடனடியாக கிட்டங்கி கள், அரிசி ஆலைகளுக்கு அனுப்ப வேண்டும். அந்த இழப்பினை பணியா ளர்கள் மீது சுமத்தக்கூடாது. சுமைப்பணி, துப்புரவுப்பணி டெண்டர் முறையை கைவிட வேண்டும். காலிப் பணியி டங்களை நிரப்ப வேண்டும் என்று வலி யுறுத்தி தமிழ்நாடு நுகர்பொருள் வாணி பக் கழகம் (சிஐடியு) மற்றும் கூட்டமைப்பு சங்கங்களின் சார்பில் மதுரை மண்டல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாநிலச் செயலாளர் கே.கதிரேச பாண்டியன் தலைமை வகித்தார். சிஐடியு மதுரை மண்டலச் செயலாளர் எம்.அழகுலட்சு மனன், எஸ்/எஸ் டி மண்டலச் செயலாளர் சி.தங்கராஜ், ஐஎன் டியுசி சங்கத்தின் மதுரை மண்டலத் தலைவர் பி. மொண்டி அம்பலம், மண்டல பொருளாளர் தியாக ராஜன், ஓய்வுபெற்ற ஊழியர்கள் சங்கம் எஸ்.பூமுடி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். சிஐடியு மாநில துணைப் பொதுச் செயலாளர் பி. சண்முகம் நிறைவுரையாற்றினார். ண்டல பொருளாளர் ஆர்.பாஸ்கரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.