districts

img

தேனியில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் ஐ.பெரியசாமி பிரச்சாரம்

தேனி, பிப்.10- தேனி மாவட்டத்தில் சின்ன மனூர், கம்பம், போடி, தேனி ஆகிய இடங்களில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக உள் ளிட்ட தோழமைக் கட்சி வேட்பாளர்  களை ஆதரித்து கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வாக்குச் சேகரித்தார். அப்போது அமைச்சர் ஐ.பெரியசாமி பேசியதாவது: தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு ஆட்சிக்கு வருவதற்கு 1967-ஆம் ஆண்டு முதன் முதலில் பிள்ளையார் சுழி போட்ட இடம் கம்பம் தொகுதி. அரசியல் பயணத்திலும், மொழிப் போராட்டத்திலும், விலைவாசி உயர்வு போராட்டத்திலும் தமிழ கத்திற்கே முத்தாய்ப்பாய் இருந்து கம்பம், கூடலூர் பகுதிதான் என்பது அரசியல் வரலாறு. தற்போது தமி ழகத்தில் உங்களது ஆசியால் ஒரு நல்லாட்சி ஏற்பட்டுள்ளது. கடந்த எட்டு மாத காலத்தில் நிறைய திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். இப்பகுதியில் முல்லைப் பெரியாறு மூலம் சுமார் 14 ஆயிரம் ஏக்கர் நிலத் தில் விளையும் நெல்களை விவசாயி களிடமிருந்து வாங்குவதற்கும், அவர்களுக்கு அரசாங்கத்திடமிருந்து அதிகப்படியான விலை கிடைப்ப தற்கும், 108 கோடி ரூபாயில் புதிய நவீன அரிசி ஆலை அமைத்து எல்லா தரப்பு மக்களுக்கும், எல்லா கிராமங்க ளுக்கும் தரமான ரேஷன் அரிசி வழங்குவதற்கு முதல்வர் உத்தரவிட்டு அந்தப் பணி வெகுவிரைவில் தொடங்க இருக்கிறது.  சுருளிப்பட்டி முல்லைப் பெரி யாற்றில் இருந்து கம்பம் பகுதிக்கு தண்ணீர் வரும் இடத்தில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும். தேர்தல் காலத்தில் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். திட்டங்கள் அனைத்தும் வீடு தேடிக் கொண்டுவந்து சேர்க்கும் ஆட்சி திமுக என்றார்.  நிகழ்ச்சியில் திமுக தேனி தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் கம்பம் என் .ராமகிருஷ்ணன், வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் தங்க.தமிழ்செல்வன், தேர்தல் பணிக்குழுச் செயலாளர் கம்பம் செல்வேந்திரன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் முருகேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் டி.வெங்க டேசன், மாவட்டச் செயலாளர் ஏ.வி. அண்ணாமலை, சிபிஐ மாவட்டச் செய லாளர் பெருமாள், மதிமுக மாவட்டச் செயலாளர் ராமகிருஷ்ணன், சட்ட மன்ற உறுப்பினர்கள் ஆ.மகாராஜன், கே.எஸ்.ஆறுமுகம் உள்ளிட்ட கூட்ட ணிக் கட்சியினர் கலந்து கொண்டனர்.