districts

img

விமானத்தில் கோவை வந்த மாணவர்கள்

கோவை, டிச.17- சென்னையிலிருந்து கோவை க்கு விமானத்தில் வந்த, ஆதரவற் றோர் இல்லங்களில் வசிக்கும் மாண வர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணை யர் மு.பிரதாப் உள்ளிட்ட அதிகாரி கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தனியார் சமூக அமைப்பு அண் மையில் சென்னையில் உள்ள ஆதர வற்றோர் இல்லங்களில் ஆய்வு நடத்தியது. அங்கு வசிக்கும் பல  குழந்தைகளுக்கு தங்கள் வாழ் நாளில் ஒரு முறையாவது விமா னத்தில் பறக்க வேண்டும் என்பது பெரும் ஆவலாக இருந்தது. அத் தகைய குழந்தைகளின் கனவை நன வாக்க தனியார் சமூக அமைப் பானது, தனியார் பல்கலைக்கழகத் துடன் இணைந்து “வானமே எல்லை”  என்ற ஒரு நாள் பயணத்திற்கு ஏற் பாடு செய்திருந்தது. இதற்காக ஆதரவற்றோர் இல்லங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 26 குழந்தைகள், சனியன்று காலை சென்னையிலிருந்து கோவைக்கு விமானத்தில் அழைத்து வரப் பட்டனர். இதில் ஒரு பார்வை மாற்றுத் திறனாளி மாணவரும், ஒரு திரு நங்கை மாணவியும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. சென்னையிலிருந்து விமா னத்தில் கோவை வந்திறங்கிய மாணவ, மாணவிகளை விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணை யர் மு.பிரதாப், வருவாய் பிரிவு அதிகாரி பூமா ஆகியோர் பூங் கொத்து கொடுத்து வரவேற்றனர். இதன்பின் கோவை அறிவியல் மையம், ஜி.டி நாயுடு அருங்காட்சி யகம் மற்றும் உக்கடம் குளக் கரையில் உள்ள “ஐ லவ் கோவை” ஆகிய இடங்களை சுற்றிப்பார்த்து மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதன்பின் இரவு கோவையிலிருந்து சென்னைக்கு ரயிலில் அழைத்து செல்லப்பட உள்ளனர். இதுகுறித்து ஆட்சியர் ஜி.எஸ். சமீரன் கூறுகையில், சென்னையி லிருந்து விமானத்தில் வந்த 26 மாண வர்களை வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். இதே போன்று கோவையிலிருந்து 37 மாண வர்கள் சென்னை சென்றனர். அவர்கள் அங்கு சுற்றி பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர், என்றார்.