இராமநாதபுரம், ஜூன் 20- இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஜூன் 20 அன்று மாவட்ட அளவில் மேற்கொள்ளப்பட்டு வரு கின்ற வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அரசு செய லர் க.நந்தகுமார் ஆய்வு மேற்கொண்டார்.இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் பங்கேற்றார். இந்த ஆய்வின்போது, ஊரக வளர்ச்சித் துறை சார்பில் மேற்கொள்ளப்படும் திட்டங்களான அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், ஜல்ஜீவன் மிஷின் சமத்துவபுரங்களின் பராமரிப்பு, உள்ளிட்ட பணிகள் மற்றும் மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டதுடன் பணி களை திட்டமிட்டபடி உரிய காலத்திற்குள் முடித்திட வேண்டும். முதலமைச்சர் அறி வுரைப்படி அரசின் திட்டங்கள் அனைத்து மக்களுக்கும் கிடைத்திடும் வகையில் செயல்பெற்றிட வேண்டுமென அலுவ லர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, அச்சுந்தன்வயல் ஊராட்சியில் மகளிர் குழு அங்கன்வாடி மையம் கட்டடம் கட்டி வருவதை பார்வை யிட்டு மகளிர்களின் சிறந்த பணியை மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் க.நந்த குமார் பாராட்டினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.கோவிந்தராஜலு, இராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் கோபு, மகளிர் திட்ட இயக்குநர் அபிதா ஹனீப் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்ட னர்.