districts

img

மதுரை காமராசர் பல்கலைக்கழக நிர்வாகத்தால் பணிநீக்கம்

மதுரை காமராசர் பல்கலைக்கழக நிர்வாகத்தால் பணிநீக்கம் செய்யப்பட்ட தொகுப்பூதிய பணியாளர்கள் 136 பேர் செவ்வாய்க்கிழமை முதல் 72மணி நேர தொடர்  உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  போராட்டத்தை ஆதரித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மதுரை மாவட்ட செயலாளர் கே. நீதி ராஜா, மதுரை மாநகர சிஐடியு  மாவட்டச் செயலாளர் இரா.லெனின் மற்றும் பலர் பேசினர்.அரசு ஊழியர் சங்கம் மாநில பொதுச் செயலாளர் ஆ.செல்வம் குளிர்பானம் கொடுத்து போராட்டத்தை நிறைவு செய்து வைத்து பேசினார்.  காமராஜர் பல்கலைக்கழக தொகுப்பூதியம் மற்றும் தற்காலிக பணியாளர் சங்க தலைவர் மு.வீரபாண்டி நன்றி கூறினார். தொடர்ந்து அவர்கள் கூறுகையில், அடுத்த கட்ட போராட்டம் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தனர்.