districts

img

வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண் தோசை கல் கண்டுபிடிப்பு

வெம்பக்கோட்டை, ஜூலை 17- விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடை பெற்று வரும் அகழாய்வில் சுடுமண் தோசை கல் கண்டெ டுக்கப்பட்டது.  வெம்பக்கோட்டை அருகே உள்ளது விஜயகரிசல் குளம். இங்குள்ள உச்சிமேட்டு காட்டில் 2 ஆம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில், ஏற்கனவே, தங்க அணிகலன், தங்க பட்டை,  சுடு மண்ணால் ஆன பொம்மை, சுடுமண் அகல்விளக்கு, காதணி, எடைக்கல், பதக்கம், கண்ணாடி மணிகள், வணிக முத்திரை, சங்கு வளையல்கள், யானை தந்தத்தால்  ஆன பகடை, தக்களி, செங்கல், சில்லு வட்டம், ஆண் உருவ சுடுமண் பொம்மை, சுடுமண் கிண்ணம் உள்ளிட்ட ஏராளமான  பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கருப்பு நிற சுடுமண் தோசைக்கல் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. வட்ட வடிவிலான சுடுமண் தோசைக் கல் சேதமடைந்த நிலையில் உள்ளது. மேலும், இங்கு  உணவு தயாரிக்கும் பொருட்கள் கண்டறியப்பட்டு வருவதால், இது தொன்மையான மனிதர்களின்  வாழ்விட பகுதியாக  இருந்திருக்கலாம் என தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.