மதுரை, ஜன.17- தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக் கட்டு, மஞ்சுவிரட்டு போட்டிகள் நடை பெற்றன. இதில் உலகப்புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக் கட்டு ஜனவரி 17 புதன்கிழமையன்று நடைபெற்றது. ஜல்லிக்கட்டு போட்டியை தமி ழக இளைஞர் நலன் -விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
முன்னதாக மாவட்ட ஆட்சியர் மா. சௌ.சங்கீதா தலைமையில் மாடு பிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து அலங் காநல்லூர் முனியாண்டி கோயில் காளை உள்ளிட்ட கோயில் காளை கள் அவிழ்த்து விடப்பட்டன. இதைத்தொடர்ந்து வாடிவாசல் வழியாக வரிசையாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. சீறி வந்த காளைகளை வீரர்கள் அடக்கினர்.
இதில் பல காளைகள் வீரர்களிடம் சிக்காமல் களத்தைச் சுற்றி வந்து வீரர்களை தூக்கி வீசின. 800 க்கும் மேற்பட் காளைகள் சீறிப்பாய்ந்தன. சில காளைகளின் பெயரை அறி வித்ததும், மாடுபிடி வீரர்கள் அங்கி ருந்த மறைவிடங்களில் பதுங்கினர். 3 வீரர்கள் பலத்த காயமடைந்தனர். வலசையைச் சேர்ந்த மோனிகா, எட்டிமங்கலம் அமுதா உள்பட சிறுமி களும், சில சிறுவர்களும் தங்கள் காளைகளை வாடிவாசல் வழியாக விடுவித்தனர். சிறுவர். சிறுமியரின் ஆர்வத்தை பாராட்டி விழாக்குழு சார்பாக மிதிவண்டிகள் பரிசாக வழங்கப்பட்டன.
தங்க மோதிரம், தங்க நாணயம்: மேலும் களத்தில் சிறப்பாக விளையாடி காளைகளை அடக்கிய வீரர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தங்கமோதி ரங்களை பரிசாக வழங்கினார். ஜல்லிக்கட்டில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், திரைப்பட நடிகர் சூரி ஆகியோரின் காளைகளும் அவிழ்த்து விடப்பட் டன.
ஜல்லிக்கட்டில் களத்தில் நின்று விளையாடிய காளைகளை விடா மல் உயிரை பணயம் வைத்து திமி லைப்பிடித்து அடக்கிய வீரர் களுக்கு, தங்க நாணயம், தங்க மோதிரம், வெள்ளி நாணயம், மிதி வண்டி, மெத்தை உள்பட ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன. இதே போல களத்தில் வீரர்களிடம் சிக்கா மல் களத்தைச்சுற்றி வந்து வீரர்களை தூக்கி வீசிய காளைகளின் உரிமை யாளர்களுக்கும் தங்க மோதிரம், தங்க நாணயம், மெத்தை, மிதி வண்டி, வேட்டி உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டு களத் தில் மீட்பு மற்றும் அவசர உதவி களுக்காக தீயணைப்புத் துறை, செஞ்சிலுவை சங்கத்தினர் நிறுத்தப் பட்டிருந்தனர்
. களத்தில் காயம டைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் குழுவினர் மீட்டு முதலுதவி அளித்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். காளைகளை அடக்க முயன்ற மாடுபிடி வீரர்கள் 28 பேர், காளை களின் உரிமையாளர்கள் 18 பேர், காவல்துறையினர் 6 பேர், பார்வை யாளர்கள் 27 பேர், ஆம்புலன்ஸ் உதவியாளர் ஒருவர் என 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் பலத்த காயமடைந்த 12 பேர் மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மதுரை அரசு மருத்துவமனையில் 10 க்கும் மேற் பட்ட சிறப்பு மருத்துவர்கள் அடங் கிய குழுவினர் வீரர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
தென் மண்டலக் காவல்துறைத் தலைவர் டி.எஸ்.நரேந்திரன் நாயர், துணைத்தலைவர் கே.பி.ரம்யா பாரதி, ஊரகக்காவல் கண்காணிப்பா ளர் டோங்ரே பிரவீண் உமேஷ், தேனி கண்காணிப்பாளர் சிவபிரசாத் ஆகி யோர் தலைமையில் 3 ஆயிரத்துக் கும் மேற்பட்ட போலீஸôர் பாது காப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர். இதில் அமைச்சர்கள் பி.மூர்த்தி, அனிதா ராதாகிருஷ்ணன், மகா ராஷ்டிர மாநில அமைச்சர் அனில் பீமா, மதுரை நாடாளுமன்ற உறுப்பி னர் சு.வெங்கடேசன், சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.தளபதி, ஏ. வெங்கடேசன், மு.பூமிநாதன், அதி முக முன்னாள் அமைச்சர் சி.விஜய பாஸ்கர், திரைப்பட நடிகர்கள் அருண் விஜய், சூரி, திரைப்பட இயக்குநர் ஏ.எல்.விஜய் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
கண்டுகளித்த வெளிநாட்டினர்
தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் 100-க்கும் மேற்பட்ட வெளி நாட்டு சுற்றுலாப்பயணிகள் பார்வை யாளர் மாடத்தில் அமர்ந்து போட்டி யை கண்டுரசித்தனர்.
இளைஞர்களின் வீரம் பிரமிக்க வைக்கிறது: நடிகர் அருண் விஜய்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பார்த்த ரசித்த நடிகர் அருண் விஜய் செய்தியாளர்களிடம் கூறுகையில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை கேள்விப்பட்டுள்ளேன். தற்போது முதல்முறையாக நேரில் பார்க்கி றேன். தமிழ் மண்ணின் கலாச்சா ரம், பண்பாட்டை பிரதிபலிப்பதாக வும், தமிழர்களின் வீரத்தை பறை சாற்றுவதாகவும் ஜல்லிக்கட்டு அமைந்துள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டிக்கு தமிழக அரசு சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளது. ஜல் லிக்கட்டில் பங்கேற்றுள்ள மாடு பிடி வீரர்களின் வீரம் பிரமிக்க வைக்கி றது. ஜல்லிக்கட்டு தொடர்பான கதை அமைந்தால் உறுதியாக நடிப்பேன். எனது திரைப்படங்களில் சண்டைக் காட்சிகளில் டூப் பயன்படுத்துவது இல்லை. எனவே காளையை அடக்கு வதை கற்றுக்கொண்டு அதுதொடர் பான படங்களில் நடிக்க ஆசைப்படு கிறேன் என்று தெரிவித்தார்.
காளைக்கும் வீரருக்கும் சளைக்காத போட்டி: நடிகர் சூரி
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் திரைப்பட நடிகர் சூரியின் காளை யும் அவிழ்த்துவிடப்பட்டது. இதை கண்டு ரசித்த நடிகர் சூரி செய்தியா ளர்களிடம் கூறுகையில், எனது பிறந்த மண் மதுரை. உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ள அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்றுள்ளேன். போட்டியில் எனது காளையும் அவிழ்த்து விடப் பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டி யில், காளையா? மாடுபிடி வீரரா? என சளைக்காமல் போட்டி நடைபெறு கிறது. விடுதலை-2 திரைப்படத்துக்கு பின்னர் ஜல்லிக்கட்டு தொடர்புடைய கதையில் நடிப்பேன் என்றார்.