districts

img

மாற்றுத்திறனாளிகள் சங்க மதுரை புறநகர் மாவட்ட மாநாடு

மதுரை, ஜூலை 20- தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்  திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மதுரை புறநகர் மாவட்ட மாநாடு பேரணி பொதுக் கூட்டத்துடன் எழுமலையில் நடைபெற்றது. எழுமலை சிதம்பரம் தியேட்டர் அருகே இருந்து பேரணி துவங்கி முத்தாலம்மன் கோவில் அருகே பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் பேரணி நிறைவடைந்தது.  பொதுக் கூட்டத்திற்கு மாவட்ட  துணைத்தலைவர் கே. தவமணி  தலைமை வகித்தார். பொதுக்கூட்டத் தில் சங்கத்தின் மாநில பொதுச் செய லாளர் எஸ்.நம்புராஜன், மாநில செயலா ளர் பி.முத்துக்காந்தாரி ஆகியோர் விளக்கி  பேசினர். மாதர் சங்க மாவட்ட செயலா ளர் செ.முத்துராணி வாழ்த்திப் பேசி னார்.  டி.லெட்சுமணன், பொன்னையா ஆகியோரது நினைவரங்கம் அம்மு திருமண மஹாலில் பிரதிநிதிகள் மாநாடு புதன்கிழமையன்று நடை பெற்றது. மாநாட்டிற்கு மாவட்டத் துணைத் தலைவர் கே. தவமணி தலைமை வகித்  தார். சங்க கொடியினை சின்னசாமி ஏற்றினார். டி.கல்லுப்பட்டி ஒன்றிய செய லாளர் ஆர்.குட்டிராஜா அஞ்சலி தீர்மா னம் வாசித்தார். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சேடப்பட்டி ஒன்றிய  செயலாளர் பெ.ராஜாசங்கர் வரவேற்று  பேசினார். மாநாட்டை துவக்கி வைத்து மாநிலச் செயலாளர் பி.முத்துக்காந் தாரி பேசினார்.  மாவட்டச் செயலாளர் வி.முருகன் வேலையறிக்கையும் மாவட்டப் பொரு ளாளர் ஐ.சுப்பரமணி வரவு -செலவு அறிக்கையும் சமர்ப்பித்தனர். மாநில நிர்வாகி பி.ஜீவா, மாதர் சங்க மாவட்டச் செயலாளர் செ.முத்துராணி ஆகியோர்  வாழ்த்திப் பேசினர். மாநிலப் பொதுச் செயலாளர் எஸ்.நம்புராஜன் நிறை வுரையாற்றினார். 

புதிய நிர்வாகிகள் 

மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டத் தலைவ ராக கே.தவமணி, மாவட்டச் செயலா ளராக வி.முருகன், மாவட்ட பொருளா ளராக ராஜேந்திரன் மற்றும் துணைத் தலைவர்களாக குட்டி ராஜா, சின்னச்  சாமி, மகாலிங்கம், துணைச் செயலா ளர்களாக எம்.பாண்டி, எஸ்.காந்தி, பி. நாகராஜ் ஆகியோர் உட்பட 25 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய் யப்பட்டது.  மாதாந்திர உதவித் தொகையை ரூ.3 ஆயிரமாகவும் ரூ.5 ஆயிரமாக வும் உயர்த்தி வழங்க வேண்டும். மாதந்  தோறும் கோட்டாட்சியர் தலைமையில் குறைதீர் கூட்டம் நடத்தி அடையாள அட்டை வழங்க வேண்டும். 100 நாள்  வேலைத்திட்டத்தில் 4 மணி நேர வேலை  மற்றும் வேலைக்கான கூலி ரூ.281 முழு மையாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.