மாற்றுத்திறனாளிகள் சங்க கிளை அமைப்பு கூட்டம்
இராமநாதபுரம், செப்.6- இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா மடத்தாகுளம், கிருஷ்ணாபுரத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்க கிளை அமைப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், மாவட்டச் செயலாளர் ராஜ்குமார், தாலுகா செயலாளர் முஹம்மது சுல்தான் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், தலைவராக மலைமேகம், செயலாளர்களாக அலெக்ஸ் குமார், ஞானராஜ், பொருளாளராக ராஜாத்தி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
வீட்டின் முன்பு ஏற்பட்ட திடீர் பள்ளம்
ஒட்டன்சத்திரம், செப்.6- திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் திருவள்ளு வர் சாலை உள்ளது. இந்த தெருவில் சிவக்குமார் என்ப வருக்கு சொந்தமான வீட்டின் முன்பு புதனன்று சுமார் 7 அடி நீளத்திற்கு பள்ளம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள வசிக்கும் குடியிருப்பு வாசிகள் மிகுந்த அச்சமடைந்தனர். இதையடுத்து ஒட்டன் சத்திரம் நகராட்சி நிர்வாகத்தினர் பள்ளத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
99 ஆடுகள் பொது ஏலம்
விருதுநகர், செப்.6- சாத்தூர் ஆட்டுப் பண்ணையில் செப்டம்பர் 15 அன்று வெம்பூர் செம்மறி ஆடுகள் 54 மற்றும் கன்னி வெள்ளாடு கள் 45 என மொத்தம் 99 ஆடுகள் பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. எனவே, ஏலத்தில் கலந்து கொள்ள விரும்புவோர் முன் தொகையாக ரூ.5 ஆயிரம் வரைவோலை தேசிய வங்கி மூலம் பெற்று, செப்.14-ம் தேதிக்குள் சாத்தூர் ஆட்டுப் பண்ணை துணை இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். வங்கி வரைவோலையை துணை இயக்கு நர், ஆட்டுப் பண்ணை, சாத்தூர் என்ற முகவரிக்கு எடுக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு 7305708658 என்ற தொலைபேசி எண்ணில் அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவனை மிரட்டி பள்ளி செல்ல விடாமல் தடுத்த 2 பேர் மீது வழக்கு
சாத்தூர், செப்.6- சாத்தூர் அருகே உள்ளது நடுச்சூரங்குடி. இப்பகுதி யைச் சேர்ந்த 14 வயது சிறுவன் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில், அச்சிறுவன், கடந்த ஆகஸ்ட் 19 அன்று பள்ளியின் உள்ளே தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து, சகமாணவர்கள் அவரை காப்பாற்றி யுள்ளனர். இதுகுறித்து சிறுவனின் பெற்றோர் விசா ரித்துள்ளனர். இதில், சிறுவனை அதே பகுதியைச் சேர்ந்த வேல்முருகன், கோடீஸ்வரன் ஆகியோர் கஞ்சா போதைப் பழக்கத்திற்கு உள்ளாக்கியுள்ளனர். மேலும், வீட்டிலி ருந்து பணம் கொண்டு வர வேண்டும். பள்ளிக்கு செல்லக் கூடாது என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அச்சிறுவனின் பெற்றோர் சாத்தூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளி அருகே கஞ்சா விற்றவர்கள் கைது
விருதுநகர், செப்.6- விருதுநகர் அருகே உள்ளது ஆவுடையாபுரம். இங்கு வச்சக்காரப்பட்டி காவல்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்குள்ள மேல்நிலைப்பள்ளி யின் பின்புறம், இரு சக்கர வாகனத்தில் இருந்து 2 பேர் தப்பியோட முயன்றனர். அவர்களை பிடித்து சோதனையிட்டதில், கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, வாகனம், கஞ்சா வை பறிமுதல் செய்த காவல்துறையினர், ஆர்.ஆர்.நகர் பகுதியைச் சேர்ந்த தமிழரசன் (33), துலுக்கப்பட்டியைச் சேர்ந்த குணசேகரன் (32) ஆகியோரை கைது செய்த னர்.
போலி நகையை அடகு வைத்தவர்கள் கைது
விருதுநகர், செப்.6- விருதுநகர் மீனாம்பிகை பங்களா அருகே தனியார் நிதி நிறுவனம் உள்ளது. இங்கு சுமார் 6 பவுன் நகையை அடகு வைப்பதற்காக சேதுநாராயணபுரத்தைச் சேர்ந்த அஜித்குமார் (25), விருதுநகர் ரோசல்பட்டியைச் சேர்ந்த தனபிரபாகரன் (26) ஆகியோர் வந்துள்ளனர். பின்பு, மேலாளர் சுப்புலட்சுமியிடம் நகைக்கு ஈடாக ரூ.2 லட்சம் பணம் கேட்டுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த நிதி நிறுவன ஊழியர்கள் நகையை பரிசோதித்துள்ளனர். அப்போது, அது போலியானது எனத் தெரிய வந்துள் ளது. இதையடுத்து, இருவரையும் பிடித்து காவல்துறை யினரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து, நிதி நிறுவன உதவி மேலாளர் ராஜ்குமார் கொடுத்த புகாரின்பேரில் மேற்கு காவல் நிலைய காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.
மீனாட்சி அம்மன் கோவிலில் லட்டு தயாரிக்கும் இடத்தை மாற்ற வேண்டும்
உயர்நீதிமன்றம் உத்தரவு
உயர்நீதிமன்றம் உத்தரவு மதுரை, செப்.6- மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள லட்டு தயாரிக்கும் மண்டபத்தை நான்கு மாதத்தில் வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை ஆதீனம் சார்பில் அதன் மேலாளர் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘‘மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெற்கு ஆடி விதியில் திருஞான சம்பந்தர் மண்டபம் உள்ளது. இதில், ஆதீனத்தின் சார்பில் கோவிலுக்கு வரும் பக்தர்கள், மாணவர்களுக்கு தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட சைவ சித்தாந்த பாடல்கள் ஓதுவார்கள் மூலமாக நடத்தப்பட்டு வந்தது. 291-வது ஆதினம் இருக்கும் வரை இவை அனைத்தும் நடைபெற்றன. ஆனால், 292 வது அருணகிரி நாதர் ஆதீனம் சன்னிதானமாக இருந்த காலத்தில் இவை நிறுத்தப்பட்டன. இந்நிலையில் கடந்த சில வருடங்களாக கோவி லுக்கு வரும் பக்தர்களுக்கு லட்டு தயார் செய்யும் இட மாக இது மாற்றப்பட்டுள்ளது. எனவே, லட்டு தயா ரிக்கும் இடத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்’’ என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை புதனன்று நீதிபதி ஸ்ரீமதி முன்பு வந்தது. அப்போது கோவில் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த மண்டபத்தில் மனு தாரர் கூறுவது போல எவ்வித தேவார வகுப்பும் நடை பெறவில்லை. எனவே தற்போது பக்தர்களுக்கு வழங்கும் லட்டு பிரசாதம் செய்து வருவதாக தெரி வித்தார். மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 1939, 1963, 1985-ஆம் ஆண்டின் கோவில் வரலாறு, மீனாட்சி கோவில் கும்பாபிஷேக மலர் ஆகிய புத்த கங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. இதில் திருஞான சம்பந்த மண்டபம் இருந்ததற்கான சான்றுகள், குறிப்புகள் இருந்தன. இதனை பதிவு செய்த நீதிபதி ஸ்ரீமதி, ‘‘சைவ சமயத்தை பரப்பிய நால்வர்களில் திருஞானசம்பந் தர் முக்கியமானவர். இக்கால கட்டத்தில் அனைவரும் தேவராம், திருவாசகத்தை தெரிந்து கொள்ள வேண்டும், குறிப்பாக இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்’’ என்றார். எனவே, கோவில் நிர்வாகம் லட்டு தயார் செய்யும் இடத்தை 4 மாதத்தில் வேறு இடத்துக்கு இட மாற்றம் செய்ய வேண்டும். இந்த இடத்தை மதுரை ஆதீனம் பாடசாலை நடத்த இடமளிக்க வேண்டும், வழக்கம் போல மாசி திருவிழாவின் 6ம் நாள் மண்ட கப்படியை அதே மண்டபத்தில் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
மக்களின் கோரிக்கையை ஏற்று ஆட்டோ நிறுத்தத்தை மாற்றிய சிஐடியு வணிகர்கள், பொதுமக்கள் நன்றி
சின்னாளப்பட்டி, செப்.6- திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் சின்னா ளப்பட்டியில் சிஐடியு சங்கத்தின் சார்பில் சுமார் 50-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் பூஞ்சோலை, சின்னாளப்பட்டி பிரிவு, பூஞ்சோலை பேருந்து நிறுத்தம் ஆகிய இடங்க ளில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், கடந்த சில நாட்களாக பூஞ்சோலை யில் இருக்கும் ஆட்டோ நிறுத்தத்தால் பொதுமக்களுக் கும் வணிகர்களுக்கும் சிரமம் ஏற்படுவதாக பொது மக்கள் கூறினர். இதனடிப்படையில் சிஐடியு ஒன்றிய கன்வீனர் வி.கே. முருகன், ஆட்டோ சங்க மாவட்டத் தலைவர் ஆர்.பால்ராஜ் ஆகியோர் பொதுமக்கள், வணிகர்களின் கோரிக்கை களை ஏற்று சிஐடியு சங்க ஆட்டோக்கள் பூஞ்சோலை அரு கில் உள்ள தெருவில் இருந்து இயக்கப்படுவதாக அறி வித்தனர். சின்னாளப்பட்டியில் பொதுமக்கள், வணிகர் களுக்கும் கட்சி பாகுபாடு இல்லாமல் செயல்படும் சிஐடியு சங்கத்தினரையும் ஒன்றிய கன்வீனர் வி.கே.முரு கனையும் தொடர்ந்து மக்களுக்காக போராடிவரும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரையும் பொதுமக்களும் வணிகர்களும் வெகுவாக பாராட்டினர்.
தேனியிலிருந்து மயிலாடும்பாறைக்கு அரசு நகர பேருந்து இயக்கப்படுமா?
கடமலைக்குண்டு, செப்.6- தேனி பேருந்து நிலையத்தில் இருந்து காலை 11 மணி யளவில் மயிலாடும்பாறைக்கு அரசு நகர பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக காலை 11 மணிக்கு தேனியில் இருந்து மயிலாடும்பாறைக்கு கிளம்பி வரும் நகர பேருந்து மயிலாடும்பாறை என்ற பெயர் பலகையுடன் கண்டமனூர் வரை மட்டுமே இயக்கப்படு கிறது. எனவே பொதுமக்கள் கண்டமனூரில் இறங்கி மீண்டும் வேறு பேருந்துகள் மூலம் கடமலைக்குண்டு, மயிலாடும்பாறையை வந்தடைய வேண்டிய நிலை உள்ளது. பயணிகள் கூட்டம் மிக குறைவாக இருப்பதால் கண்ட மனூர் வரை மட்டுமே பேருந்து இயக்கப்படும் என நடத்து நர் தெரிவிப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து கண்டமனூர் பகுதி பொதுமக்கள் போக்கு வரத்துத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மயிலாடும்பாறை வரை அரசு நகர பேருந்தை இயக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரு வாரத்தில் 15 அடி அதிகரிப்பு
திருநெல்வேலி, செப்.6- நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவி வருகிறது. நெல்லையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த 3 நாட்களாக மழை பெய்ததால் அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டது. இதனால் பாபநாசம், சேர்வலாறு ஆகிய 2 அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்தது. 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 62 அடியாக இருந்த நிலையில், புதன்கிழமை மேலும் ஒன்றரை அடி உயர்ந்து 63.50 அடியாக உள்ளது. இந்த அணைக்கு வினாடிக்கு 1,078 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. கடந்த மாத இறுதியில் பாபநாசம் அணையின் நீர்மட்டம் 48 அடியாக இருந்த நிலையில், மழை காரணமாக புதன்கிழமை 63.50 அடியை எட்டியுள் ளது. இதனால் கடந்த ஒரு வாரத்தில் அணை நீர் இருப்பு சுமார் 15 அடி அதிகரித்துள்ளது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 76 அடியாக உள்ளது. செவ்வா யன்று மணிமுத்தாறு அணை பகுதியில் மட்டும் லேசான மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள மாஞ்சோலை பகுதியில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மழை இல்லை. நாலுமுக்கு எஸ்டேட் மற்றும் ஊத்து பகுதி களில் மட்டும் லேசான சாரல் பெய்தது. பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காட்சியளித்தது.
பெண்ணிடம் சங்கிலி பறிப்பு
திருநெல்வேலி, செப்.6- பெண்ணிடம் சங்கிலி பறித்து சென்ற மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாளையங்கோட்டையை சேர்ந்தவர் மகாலட்சுமி (53). இவர் மானூர் யூனியன் அலுவலகத்தில் ஓவர்சீய ராக பணியாற்றி வருகிறார். இவர் செவ்வாய்க்கிழமை ஸ்கூட்டரில் வழக்கம்போல் அலுவலகம் நோக்கி வந்து கொண்டிருந்தார். நாஞ்சான்குளம் அருகே வந்தபோது அவருக்கு பின்னால் நம்பர் பிளேட் இல்லாத மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் ஒருவர், மகாலட்சுமி அணிந்தி ருந்த 5 பவுன் தாலி சங்கிலி உள்ளிட்ட 2 சங்கிலிகளை பறித்து சென்றார். அப்போது மற்றொரு சங்கிலி அறுந்த தில் ஒரு பகுதி மர்மநபரின் கையில் சிக்கியது. அந்த சங்கிலி களுடன் மர்மநபர் தப்பிச் சென்றார். இதுகுறித்து மகாலட்சுமி, மானூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீடு புகுந்து மூதாட்டி மீது தாக்குதல்
திருநெல்வேலி, செப் .6- நாங்குநேரி அருகே உள்ள விஜயநாராயணம் ஏழாங்கால், மேலத்தெருவை சேர்ந்தவர் முருகன் மனைவி செல்வி (62). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சித்திரைவேல் மகன் பிரபு, அவரது மனைவி ரம்யாவிற்கும் தண்ணீர் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டுள் ளது. இதனைதொடர்ந்து செல்வி வீட்டில் இருக்கும் போது, அவரது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த பிரபு, அவரது மனைவி ரம்யா ஆகியோர் செல்வியை அவதூ றாக பேசி தாக்கினர். மேலும் கொலை மிரட்டலும் விடுத்த னர். இதனால் காயம் அடைந்த அவர் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுபற்றி விஜயநாராயணம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி இது தொடர்பாக பிரபு, அவரது மனைவி ரம்யாவை தேடி வருகின்றனர்.
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
அருமனை, செப்.6- கன்னியாகுமரி மாவட்டம் அருமனை மேல்நிலை பள்ளியில் 2000ம் ஆண்டில் 12 ஆம் வகுப்பு படித்த மாணவ மாணவிகள் ஆசிரியர் தின கொண்டாட்டமாக ஆசிரி யர்களுடன் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். குடும்பத்துடன் வருகை தந்த முன்னாள் மாணவர்கள் தங்கள் கருத்துகளையும் தங்கள் வாழ்க்கை நிலையையும் பகிர்ந்து கொண்டு உற்சாகமாக விழாவினை கொண்டாடி சிறப்பித்தார்கள். முன்னாள் தலைமை ஆசிரியர் கிஷோர் சந்த் மற்றும் முன்னாள் ஆசிரியர்கள் சதாம், நேசையன், எட்வின், .சைலஜா, கலா, அம் பிகா, ஸ்டெல்லா, ஷீஜா மற்றும் மாணவ மாணவிகள் ஏராளமானோர் கலந்துக் கொண்டனர். தலைமையாசிரியர் கிஷோர் சந்துக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.
போலி ஆவணம் தயாரித்து நிலம் மோசடி: வழக்கறிஞர் - உதவியாளர் கைது
தேனி, செப்.6- சின்னமனூரில் வேறு ஒரு வரின் இடத்தை போலியான கிரைய ஆவணம் தயார் செய்தும், சட்டக்கல்லூரி யில் இடம் வாங்கித் தருவ தாகக் கூறி ரூ.8 லட்சம் வரை மோசடி செய்ததாக வழக்க றிஞர் உட்பட நான்கு பேர் மீது தேனி மாவட்டக் குற்றப் பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து வழக்கறிஞர் மற்றும் அவரது உதவியாளரைக் கைது செய்தனர் . தேனி ஒன்றியம் சீலை யம்பட்டி பகுதியைச் சேர்ந்த பாண்டி மகன் ராமகிருஷ் ணன்(33). சின்னமனூர் பகு தியைச் சேர்ந்த சஞ்சீவி மகன் வழக்கறிஞர் ஜெகன் ராஜ் (39). ஜெகன்ராஜ் ராம கிருஷ்ணனிடம் தமது வீட் டிற்குப் பின்புறம் இரண்டு பிளாட்டுகள் உள்ளதாகக் கூறியுள்ளார். ரூ.8 லட்சத் திற்கு விற்பனை செய்ய வேண்டிய இடத்தை ராம கிருஷ்ணனிடம் ரூ.6 லட்சத் திற்குத் தருவதாகக் கூறி யுள்ளார்.
அதை நம்பி ராம கிருஷ்ணன் ரூ.6 லட்சத்தை ஜெகன்ராஜிடம் கொடுத்துள் ளார். ஆனால் அந்த இடம் வேறு இருவர்களின் பெய ரிலிருந்ததாகவும், அவர் களுக்குத் தெரியாமல் போலியான கிரைய ஆவ ணத்தைத் தயார் செய்து கொடுத்ததாகவும் கூறப்படு கிறது. அதன் பின்னர் கடந்த 2020-ம் ஆண்டு ராமகிருஷ் ணன் திருப்பதியில் உள்ள சட்டக் கல்லூரியில் படிப்ப தற்கு இடம் வாங்கி தருவதா கக் கூறி அவரிடம் ரூ.3 லட் சத்தைப் பெற்றுக் கொண்டு அதில் ஒரு லட்சத்தைச் செலவு செய்து மீதமுள்ள ரூ.2 லட்சத்தை மோசடி செய்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில் இடம் வாங்கித் தருவதாகக் கூறி வேறு நபர்களுக்கு உரிய நிலத்தைக் காட்டி ஏமாற்றிய ரூ.6 லட்சம், சட்டக் கல்லூரி யில் படிப்பதற்குச் சீட்டு வாங்கித் தருவதாக மோசடி செய்த ரூ.2 லட்சம் என மொத்தம் ரூ.8 லட்சத்தைத் தர வேண்டுமென ராம கிருஷ்ணன் ஜெகன்ராஜின் அலுவலகத்திற்குச் சென்று கேட்டபோது, ஜெகன் ராஜ், மற்றும் அவரது அலு வலகத்தில் பணிபுரியும் தமிழ் அன்சாரி ஆகியோர் அரிவாளைக் காட்டி, பணத்தைத் தரமுடியாது எனக் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படு கிறது. இதுகுறித்து ராம கிருஷ்ணன் தேனி மாவட்டக் காவல் கண்காணிப்பாளரி டம் புகாரளித்தார். புகாரின் அடிப்படையில் குற்றப்பிரிவு காவல்துறையினர் ஜெகன் ராஜ், அவருக்கு உடந்தை யாக இருந்த மனைவி ரெஜினா, அம்மா முத்து லட்சுமி, அலுவலகத்தில் பணிபுரியும் தமிழ் அன்சாரி ஆகிய நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்து ஜெகன்ராஜ், தமிழ் அன்சாரி ஆகியோரைக் கைது செய்த னர்.
யூடியூபில் குறிப்பிட்ட சமூகம் குறித்து அவதூறாக பேசிய நீதிபதிக்கு கண்டிப்பு
மதுரை, செப்.6- பொறுப்பு மிக்க அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற நீதிபதி, யூடியூபில் குறிப்பிட்ட சமூகம் குறித்து அவதூறாக பேசியது மிக வும் தவறானது என்று கருத்து தெரிவித்து, அவருக்கு ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென்காசியை சேர்ந்த ஓய்வுபெற்ற நீதி பதி ராமராஜ், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை யில் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், தனியார் யூடியூப் சேனலில் சாதி குறித்து பேசியதாக என் மீது தென்காசி மாவட்ட செந்தாமரம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் அளித்த புகாரில், கடந்த மாதம் என் மீது வழக்கு பதிவு செய்து கைது செய் துள்ளனர். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு முழுமையாக ஒத்து ழைப்பேன்’’ எனக் கூறப்பட்டிருந்தது. இந்த மனு புதனன்று நீதிபதி இளங்கோ வன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப் போது நீதிபதிகள், ‘‘மனுதாரர் ஒரு பொறுப்பு மிக்க அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றுள்ளார். அவர் இதுபோன்று ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக சட்டம்- ஒழுங்கு பாதிக்கும் வகையில் பேசியிருக் கக் கூடாது’’ என கருத்து தெரிவித்தார். மேலும் மனுதாரருக்கு ஜாமீன் வழங்கி, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் தினந் தோறும் ஆஜராகி கையெழுத்து இட வேண் டும் என நிபந்தனையும் விதித்துள்ளார்.
பீபி குளம் கண்மாய் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றுவது குறித்த மறு சீராய்வு வழக்கு தள்ளுபடி
மதுரை, செப்.6- நீர்நிலைகள் ஆக்கிரமிப்பாளர்களை அகற்றுவது குறித்த உயர்நீதிமன்றம் பிறப் பித்த உத்தரவை மறு பரிசீலனை செய்ய மறுப்பு தெரிவித்து, மதுரை பீ.பி. குளம் கண்மாய் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட வீடுகள் அகற்றுவது குறித்த மறு சீராய்வு வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை பீ.பி. குளம் கண்மாய் அருகே உள்ள பகுதியில் பல ஆயிரம் குடும்பங்கள் 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வந்த னர். இந்த பகுதி, பீ.பி. குளம் கண்மாயை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக் கல் செய்யப்பட்டன. இதனை விசாரித்த நீதிமன்றம் முறை யாக நோட்டீஸ் அனுப்பி ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்த உத்தரவை செயல்படுத்தும் வித மாக மதுரை மாநகராட்சி இப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக வீடுகளை இடித்து அகற்றி வருகின்றனர். இதனால், இப்பகுதியில் வறுமை கோட்டுக்கு கீழ் வசிக்கும் பொதுமக்கள் வீடுகளை இழக்கும் நிலை ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து பீ.பி. குளம் பகுதியில் கட்டப்பட்டுள்ள குடியிருப்பு வீடு களை விட்டு அரசு தங்களை வெளியேற்று வதற்கு எதிராகவும், பாதுகாப்பு கோரியும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஏராள மான மேல் முறையீட்டு மனு மற்றும் மறு சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுவை புதனன்று விசாரித்த நீதிபதிகள் சுப்பிரமணியன், புகழேந்தி, ‘‘அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் மூலம் பி.பீ. குளம் பகுதி ஆக்கிரமிப்பு பிரச்சனைகளை எதிர் கொண்டு உள்ளது. ஆக்கிரமிப்பாளர் களுக்கு அதிகாரிகள் பல முறை நோட்டீஸ் கள் அனுப்பி வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் ஆவ ணங்கள் மூலம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் வடக்கு தாலுகா தாசில்தார் அளித்துள்ள அறிக்கையில், 642 ஆக்கிர மிப்பாளர்களில், 109 பேர் மட்டுமே வறுமை நிலையில் உள்ளனர். இவர்கள் அடையா ளம் காணப்பட்டு, தகுதியான அனைத்து பயனாளிகளுக்கும் விரைவில் வீடுகளை வழங்க அதிகாரப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே, இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட வேண் டும்’’ என பதில் அறிக்கை தாக்கல் செய்தார். எனவே நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு செய்துள்ளது ஏற்றுக்கொள்ள முடியாது. கண்மாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை காலி செய்து கொடுக்க வேண்டும். மேலும் பீ.பி. குளம் கண்மாயில் உள்ள ஆக்கிர மிப்பாளர்களில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மதுரை ராஜாக்கூர் வீட்டு வசதி வாரியத்தில் உள்ள வீடுகளில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பா ளர்களை அகற்றுவது குறித்த உச்ச நீதி மன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படை யில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்த ரவை மறு பரிசீலனை செய்ய மறுப்பு தெரி வித்து வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி கள் உத்தரவிட்டனர்.