districts

img

மாற்றுத்திறனாளிகள் போராட்டம் மனநல காப்பகத்தை திறக்க உத்தரவாதம்

பழனி, நவ.3- பழனியில் நவம்பர் மாத இறுதிக்குள் மனநல காப்ப கம் திறக்கப்படும் கோவில் தேவஸ்தான நிர்வாகம் உறுதியளித்துள்ளது.  பழனி முருகன்கோவி லுக்கு நாள்தோறும் ஏராள மான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். இவர்கள்  தங்கள் இல்லங்களில் உள்ள மனநிலை பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளை பழனியில் கொண்டுவந்து விட்டுச்செல்கிறார்கள். சாலைகளில் ஆதரவற்ற வர்களாகத் திரியும் மாற்றுத்திறனாளிகள் உண விற்காக அங்கும் இங்கும் அலைந்து திரிவது பரிதா பத்திற்குரியதாக உள்ளது.  இத்தகைய மாற்றுத்திற னாளிகளைப் பராமரித்து அவர்களது குடும்பத்தாரு டன் சேர்த்து வைக்க வசதி யாக பழனியில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக் கான காப்பகம் திறக்க வேண்டுமென  பத்து ஆண்டு களுக்கும் மேலாக தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக் கான சங்கம் போராடி வரு கிறது.  இதைத் தொடர்ந்து கடந்தாண்டு பழனி தேவஸ் தான நிர்வாகமும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறையும் இணைந்து பழனி  ரெணகாளியம்மன் கோவில் அருகில் உள்ள ராம கிருஷ்ணா விடுதியை மன நல காப்பகமாக மாற்ற முடிவு செய்து  ஐம்பது லட்சம் ரூபாய் நிதி ஒதுக் கீட்டில் பணிகள்  முடிக்கப் பட்டது. பணிகள் முடிந்து ஆறு மாதங்களாகியும் மனநல காப்பகம் திறக்கப்பட வில்லை. காப்பகத்தை திறக்க வேண்டுமென வலி யுறுத்தி வெள்ளிக்கிழமை ராமகிருஷ்ணா விடுதி முன்பாக மாற்றுத்திற னாளிகள் சங்கத்தின் பழனி நகர் செயலாளர் தங்க வேல் தலைமையில் கால வரையற்ற காத்திருப்பு போராட்டம் தொடங்கியது. பழனி நகர் தலைவர் காளீஸ் வரி, ஒன்றியத் தலைவர் மணிகண்டன், செயலாளர் கண்ணுச்சாமி, பொருளாளர் பாலக்குமார், மாவட்டத் தலைவர் ஜெயந்தி, மாவட் டச் செயலாளர் பகத்சிங் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  தகவலறிந்து வந்த கோவில் இணை ஆணையர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது நவம்பர் இறுதிக்குள் மன நல காப்பகத்தை திறந்து வைப்பதாக உறுதியளித் தார். இதையடுத்து போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.