திண்டுக்கல், ஜுன் 10- 5 ஆண்டுகள் ஆகியும் திண்டுக் கல் கரூர் சாலையில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதை பணிகள் நிறைவடையாமல் உள்ளது. திண்டுக்கல்லில் இருந்து திருச்சி- கரூர் ஆகிய ஊர்களுக்கு இரட்டை சாலைகள் செல்கிறது. இரண்டு ரயில்வே கேட்டுகள் இருந்த காலத்தில் இரண்டு சாலை யிலும் கேட் போட்டால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாவார்கள். இந்நிலையில் திருச்சி செல்லும் சாலையில் மட்டும் ரயில்வே மேம் பாலம் கட்டப்பட்டது. திட்டமிடும் போதே கரூர் சாலைக்கும் ஒரே பாலத்தில் இரண்டு பிரிவாக செய்திருந்தால் பிரச்சனை முடிந்தி ருக்கும். ஆனால் திருச்சி சாலைக்கு ஒரு மேம்பால திட்டம் செயல் படுத்தப்பட்டது. கரூர் சாலைக்கு சுரங்கப்பாதை பாலம் கட்ட திட்ட மிடப்பட்டது. இதன் காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் பணிகள் நடைபெறு கிறது. சரியான திட்டமிடலோடு இந்த சுரங்கப்பாதை கட்டப்பட வில்லை என்ற குற்றச்சாட்டு உள் ளது. இந்நிலையில் சுரங்கப்பாதை யின் அடியில் நீர் ஊற்று ஏற்பட்டு பெரிய கிணற்றை போல காட்சி யளிக்கிறது. இந்த தண்ணீரை மோட்டார் பம்ப் செட் வைத்து வெளி யேற்றுகிறார்கள். மேலும் பேருந்து கூட செல்ல முடியாத அளவிற்கு பாலம் மிகவும் தாழ்வாக அமைந் துள்ளது. இன்னும் படிக்கட்டுகள் கட்டும் பணிகள் நிறைவடைய வில்லை.
பாதசாரிகளுக்கான பாதையும் அமைக்கப்படவில்லை. அந்த அளவிற்கு சுரங்கப்பாதை யில் தண்ணீர் எப்போதும் இருப்ப தால் பணிகள் நடைபெறுவதில் சிக் கல் எழுந்துள்ளது. இதனால் கடந்த 5 ஆண்டுகளாக வேலை நடை பெறாமல் இழுத்தடிக்கப்பட்டு வரு கிறது. இந்த சுரங்கப்பணிகள் நடை பெறாததால் அருகில் உள்ள எம்.வி.எம்.நகர் , நந்தவனப்பட்டி கூட்டு றவு நகர் நகர் கரூர் சாலையில் குடி யிருக்கும் மக்கள் 5 கிலோ மீட்டர் தூரம் பயணித்து தங்கள் வீடு களுக்கு வரவேண்டியுள்ளது. இந்த சுரங்கப்பாதை பணிகள் நிறை வடையாததால் திண்டுக்கல்- கரூர் சாலையில் உள்ள 10 க்கும் மேற் பட்ட பள்ளிகள் 3 கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவியர்கள் அவதிப்படுகின்றனர். பயணிகள் பேருந்தும் கூட 5 கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டி யுள்ளது. 5 ஆண்டுகளாக சுரங்கப் பணிகள் நிறைவடையாததால் வரிப்பணம் வீணடிக்கப்பட்டதாக மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இந்த சுரங்கப்பாதை பணிகளை விரைந்து முடித்து திறந்துவிடுங் கள் அல்லது மூடிவிடுங்கள் என்று மனம் நொந்து போய் சொல்கிறார் கள் இப்பகுதி மக்கள். இந்த சுரங்கப்பாதை பாலம் குறித்து சமீபத்தில் திண்டுக்கல் வந்த நகரப்புற அமைச்சர் கே.என்.நேரு விடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் எம்.வி.எம். நகர் மக் கள் மனு அளித்தனர்.
நவம்பர் மாதத்திற்குள் திறக்கப்படும்
பொதுப்பணித்துறை அதிகாரி லட்சுமி பேட்டி
ரூ.16 கோடி மதிப்பில் இத்திட்டத் திற்கு அனுமதி கிடைத்துள் ளது. முதலில் வந்த ஒப்பந்தகாரர் பணி யை செய்ய முடியவில்லை என்று கூறி வெளியேறிச்சென்று விட்டார். மறு ஏலம் விடப்பட்டு ரயில்வே பணிகள் நடை பெற்று வருகின்றன. 2 கோடி செலவில் மீதமுள்ள 8 மீட்டர் பணிகள் நடைபெற்று வருகின்றன. 92 விழுக்காடு பணிகள் நடைபெற்றுள்ளன. சுரங்கப்பாதையின் எல்லையில் பம்ப் வேலைகள் உள் ளன. 3.66 மீட்டர் அளவு தான் கொடுக் கப்பட்டுள்ளது. 5.77 மீட்டர் அளவு கொடுக்கப்படவில்லை. எனவே இந்த சுரங்கப்பாதை குறைந்த பட்ச அளவில் பயன்படுத்தக்கூடிய சுரங்கப்பாதை தான். நவம்பர் மாதத்திற்குள் பணிகளை நிறைவு செய்ய ஒப்பந்தக்காரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பழனியி லுள்ள நபார்டு கன்ஸ்ட்ரக்சன் இந்த சுரங்கப்பணிக்கு 2வது ஒப்பந்தகாரராக பணியேற்றுள்ளது. சுரங்கப்பாதையின் கீழே தோண்ட தோண்ட வெறும் பாறை யாக உள்ளதால் வேலை தாமதமாகிறது. அருகில் உள்ள மின்மாற்றியை அங்கி ருந்து அகற்றுமாறு கூறியும் மின்வாரியம் அகற்றாமல் உள்ளது. ரயில்வே பணி இப்போது தான் நடந்து வருகிறது. ஒப்பந்ததாரருக்கு போதிய இடவசதி செய்து தரவில்லை என்ற காரணத்தைக் கூறித்தான் முதல் ஒப்பந்தக்காரர் இந்த பணியிலிருந்து வெளியேறினார். தற்போது வந்துள்ள ஒப்பந்தக்காரர் ஜுலை முதல் வாரத்தில் செய்து தரு வதாக உறுதியளித்துள்ளார். இது தொடர்பாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளதால் விரைந்து பணி முடித்து தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளோம். புதிய ஒப்பந்தகாரர் விரைந்து செயல்பட்டு வரு கிறார். தினசரி தண்ணீர் ஊற்று பெருக் கெடுத்து வருகிறது. அதனை தினசரி மோட்டார் வைத்து அப்புறப்படுத்தி வரு கிறார்கள். இன்னும் 3 மாதத்தில் நிறை வடைந்து விடும்.பாறைகள் அதிகமாக உள்ளதாலூம் நீர் ஊற்று தினசரி பெருக்கெடுப்பதாலும் குறைந்த அளவு பணியே நடைபெறுகிறது. இதன் கார ணமாக சுரங்கப்பாதை திறக்கும் பணி தாமதமாகிறது. நவம்பர் மாதத்திற்குள் சுரங்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரி லட்சுமி தெரிவித்தார்.