திண்டுக்கல் மாவட்டம் நத்தத்திலிருந்து துவரங்குறிச்சிக்கு நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதில் நத்தத்திலிருந்து சேர்வீடு கிராமத்திற்குச் செல்வதற்கு தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் பெய்த பலத்த மழையால் பாலம் முழுவதும் தண்ணீரால் மூழ்கியுள்ளது. இதனால் ஊருக்குள் செல்லமுடியாமல் கிராமமக்கள் தவித்து வருகின்றனர்.