பழனி, ஜூலை 23- இந்திய கட்டுமான தொழி லாளர் சங்கத்தின் (சிஐடியு) 18 ஆவது திண்டுக்கல் மாவட்ட மாநாடு ஜூலை 23 ஞாயிறன்று பழனியில் நடைபெற்றது. மாநாட்டிற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். மூத்த தோழர் எம் பழனிச்சாமி கொடி யேற்றினார். மாவட்ட துணைச் செயலாளர் சி.பெரியசாமி வர வேற்றார். மாவட்ட துணைச் செயலாளர் பி. பாலசுப்பிரமணி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாநிலப் பொரு ளாளர் லூர்துரூபி துவக்க உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் கே பிரபாகரன் வேலை அறிக்கையையும் மாவட்ட பொருளாளர் தீத்தான் வரவு-செலவு அறிக்கையை யும் சமர்ப்பித்தனர். மாநி லக்குழு உறுப்பினர் பேரா. சோ. மோகனா வாழ்த்திப் பேசினார். புதிய நிர்வாகிகள் மாநாட்டில் புதிய நிர்வாகி கள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டத் தலைவராக பி.பால சுப்ரமணியம், மாவட்டச் செய லாளராக கே.பிரபாகரன், பொருளாளராக டி.தீத்தான் மற்றும் துணைத் தலைவர்கள், இணைச் செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். கட்டுமான தொழிலா ளர்களுக்கு ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதில் அரசு ஓய்வூதியம் கொடுக்க வேண்டும் தொழி லாளர்களின் கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.