திண்டுக்கல், மே 10- 100 நாள் வேலை உறுதி திட்டம் கிராமப்புற மக்களின் பட்டினிச் சாவை தடுப்பதற்காக கொண்டு வரப்பட்ட அரசு திட்டம் என்று திண்டுக் கல் விசாகன் பேசியுள்ளார். ஏ.வெள்ளோடு கிராமத்தில் நடைபெற்ற விவசாயிகளுக்கான கலைஞர் திட்டத்தை துவக்கி வைத்த போது குறுக்கிட்ட விவசாயி ஒருவர், 100 நாள் வேலை திட்டத் தின் மூலம் விவசாயத்திற்கு போதிய ஆள் கிடைக்கவில்லை என்று பேசினார். இதனையடுத்து அந்த விவசாயிக்கு பதில் அளித்து ஆட்சியர் விசாகன் பேசுகையில், 100 நாள் வேலை திட்டம் என்பது கிராமப்புறத்தில் நிலவும் பட்டினிச் சாவுகளை தடுப்பதற்கு அரசு கொண்டு வந்த திட்டமாகும். இந்த 100 நாட்களில் வேலை செய்யும் குடும்பங்களுக்கு உணவளிப்ப தற்காக ஏற்படுத்தப்பட்ட அரசு திட்டமாகும். ஒரு வருடத்தில் 365 நாட்களில் 100 நாட்கள் போக மற்ற 265 நாட்களில் உங்களுக்கு விவ சாயத்திற்கு ஆள் கிடைக்கவில் லையா? என்று திருப்பி கேள்வி கேட்டார்.
இதனையடுத்து அவர் மேலும் தொடர்கையில், இந்த கிரா மத்தில் பண்ணைக் குட்டை அமைக்க விவசாயிகள் முன்வர வேண்டும். இந்த ஊரில் 1586 ஹெக்டேர் நிலம் இருப்பதாக கூறப்படுகிறது. அப்படி என்றால் 4250 ஏக்கர் நிலம் தரிசாக போடப் பட்டுள்ளது. நிலக்கடலை, உளுந்து, அஸ்வகந்தா, எள்ளு, கொள்ளு. தட்டைப்பயிறு, சோளம், மக்காச் சோளம், போன்ற பயிர்களை பயிரி டலாம். கொண்டைக்கடலை பனிக் காலத்தில் கூட விளையக்கூடியது. ஜப்பானில் நிலமே இல்லை. ஆனா லும் விவசாயம் செய்கிறார்கள். ராமநாதபுரம் போன்ற வறண்ட ஊரில் கூட விவசாயம் செய்யப்படு கிறது. இங்கே இத்தனை ஏக்கர் நிலத்தை தரிசாக போட எப்படி மனம் வந்தது. ஒரு போகமாவது விளைச் சல் எடுக்கக்கூடாதா? நான் பல ஊர்களுக்கு சென்றிருக்கிறேன். திண்டுக்கல் போன்ற ஊரை பார்த்த தில்லை. 3 வகையான சீதோசன மும் நிறைந்த ஊர் திண்டுக்கல்.. ஒரு வேம்பு, புங்கை என்று வைத் தால் கூட ஒரளவு பலன் கிடைக்கும். சொட்டு நீர் பாசனம் செய்யுங்கள். 100 சதவீத மானியம் கிடைக்க நான் ஏற்பாடு செய்கிறேன். பண்ணைக்குட்டை அமைத்தால் உங்கள் நிலம் தான் வளம் பெறும். நீங்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். வெள்ளோடு கிராமத்தை மாவட்டத் திலேயே முன் மாதிரி கிராமமாக மாற்ற முடியும் என்று ஆட்சியர் விசாகன் பேசினார். (நநி)