திண்டுக்கல், செப்.3 திண்டுக்கல்லில் அக்டோபர் 5-ஆம் தேதி புத்தகத் திருவிழா தொடங்குகிறது. அது பற்றிய விவரம் வருமாறு. திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம்- இலக்கி யக் களம் இணைந்து நடத்தும் 10-ஆவது புத்த கத் திருவிழா டட்லி மேல்நிலைப்பள்ளி மைதா னத்தில் நடைபெறுகிறது. அதனையொட்டி பல்வேறு முன்னேற்பாடு, போட்டிகள் நடத்தப் படுகின்றன. இதனொரு பகுதியாக சனிக் கிழமை மாவட்ட அளவில் பள்ளி-கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இலக்கியப் போட்டி கள் நடைபெற்றன. தவிர பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி என மொத்தம் நான்கு போட்டிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நடைபெற்றது. போட்டிகள் 6-ஆம் வகுப்பு முதல் 8- ஆம் வகுப்பு வரை ஒரு நிலையாகவும், 9- 10-ம் வகுப்பு வரை ஒரு நிலையாகவும், 11 மற்றும் 12- ஆம் வகுப்புக்கு ஒரு நிலையாகவும், கல்லூரி மாணவர்க ளுக்கு ஒரு நிலையாகவும் நடைபெற்றன. மாவட்டம் முழுவதும் மொத்தம் 2,847 பேர் போட்டிகளில் கலந்து கொண்டனர். பங்கு பெற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக் கும் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது. பண்பாட்டுப் பயணம். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு புத்தகத்திருவிழா அரங்கில் பரிசும் சான்றிதழ்களும் வழங்கப்படும். அனைத்து விதமான போட்டிகளிலும் முதல் பரிசு பெறும் மாணவ, மாணவிகள் பண் பாட்டுப் பயணம் அழைத்து செல்லப்படுவர் என்றார் போட்டிகளின் ஒருங்கிணைப்பாளர் பேரா. மு.சரவணன். வினாடி வினா நிகழ்ச்சிகள் சனிக்கிழமை இலக்கியப் போட்டிகள் நடைபெற்ற மையங்களில் வினாடி வினாப் போட்டிகள் நடைபெற்றன. 1- 5 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஓவியம்- கதை சொல்லும் போட்டிகள் மாவட்டத்தில் உள்ள 17 மையங்களில் நடைபெற்றது. மைய ஒருங்கிணைப்பாளர்களாக புலவர்.கோவிந்த ராஜ், அரங்க பெருமாள், மாரிமுத்து, வளர்மதி ஆகியோர் போட்டிகளை நடத்தினர். இலக்கி யக்களத் தலைவர் பேரா.மனோகரன் செயலா ளர் ராமமூர்த்தி பொருளாளர் பேரா.மணி வண்ணன், நிர்வாகச்யலாளர் கண்ணன் மற்றும் அனைத்து நிர்வாகிகள் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.