districts

தினமலர், பாலிமர் பொய்ச்செய்தி கே.இராஜேந்திரன் மறுப்பு

மதுரை, ஜூன் 24- மதுரையில் நடைபெற்ற போராட்டம் குறித்து தினமலர், பாலிமர் வெளியிட்டுள்ள பொய்ச் செய்திக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மறுப்புத் தெரிவித்துள்ளது.  இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர்  மாவட்டச் செயலாளர் கே.இராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய இளைஞர்களின் வேலைவாய்ப்புக் கனவை சிதைக்கும் வகையிலும் ராணுவத்தை ஆர்எஸ்எஸ்மயமாக்கும் வகையிலும் ஒன்றிய பாஜக கூட்டணி அரசால் கொண்டுவரப்பட்டுள்ள  அக்னி பாதை  திட்டத்தை எதிர்த்தும், மதுரை-வாரணாசி இடையே தனியார் ரயிலை  இயக்கும் முடிவைக் கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  வியாழனன்று ரயில் நிலைய முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பின ருமான சு.வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்  தில் நூற்றுக்கணக்கானோர் பேரெழுச்சியுடன் கலந்துகொண்டனர். போராட்டம் மதுரை மக்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது.  ஆனால், தினமலர் ஏடும், பாலிமர் தொலைக்காட்சியும் உண்மைக்கு  சற்றும் பொருந்தாத வகையில் அவதூறு செய்தியை வெளி யிட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. கட்சியின் மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் கே.இராஜேந்திரன் போலீசாரைத் தாக்கியதாக தினமலரும், பாலிமர் தொலைக்காட்சியும் செய்தி வெளியிட்டுள்ளன. இதில் சற்றும் உண்மையில்லை. காவல்துறையினர் அவ்வாறு கூறவும் இல்லை. ஆனால், எவ்வித முகாந்திரமும் இன்றி ஆதா ரமும் இன்றி இத்தகைய செய்தியை வெளியிடுவது ஊடக நெறிக்கு எதிரானது. தினமலர் மற்றும் பாலிமர் தொலைக்காட்சி மறுப்புத் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.