districts

img

சிவகாசி ஒன்றியத்தில் வளர்ச்சிப் பணிகள் : ஆட்சியர் ஆய்வு

விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில்  சிவகாசி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் நேரில் ஆய்வு செய்தார்.  சிவகாசி ஒன்றியம் சுக்கிரவார்பட்டி ஊராட்சிக்குட்பட்ட ஆதி வீரன்பட்டியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.14.50 லட்சத்தில் வரத்து கால்வாய் தூர்வாரும் பணிகள், விஸ்வநத்தம் ஊராட்சி ஓ.பி.ஆர் நகரில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.11.77 லட்சத்தில் நியாயவிலைக் கடை கட்டும் பணி,  பூச்சன்காலனியில் ரூ.49.78 லட்சத்தில் கால்வாய் கட்டும்பணி, தொடக்கப்பள்ளியில் கட்டப்பட்டு வரும் சமையல் கூடம், ஆனையூர் ஊராட்சி லட்சுமிபுரத்தில் ரூ.13.82 லட்சத்தில் செங்குளம் கண்மாய் தூர்வரும் பணி ஆகியவற்றை பார்வையிட்டு மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.  மேலும், பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடிக்க வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். ஆய்வின் போது, திட்ட இயக்குநர் தண்டபாணி, வட்டாட்சியர் லோகநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.