இராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பொதுசுகாதாரத் துறையின் மூலம் 500 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவ சேவை மையங்கள் திறப்பு விழா மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் தலைமையில் சனிக்கிழமையன்று (ஆக.26) நடைபெற்றது. மருத்துவ சேவை மையங்களை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் ஆகியோர் திறந்து வைத்து சிகிச்சை பிரிவு மையங்களை பார்வையிட்டனர். மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு.கோ.செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.