திண்டுக்கல், ஆக.7- பழனியில் அரசு போக்குவரத்துக் கழகம் (திருப்பூர் மண்டலம்) சார்பாக பேரவை நடைபெற்றது. அப்போது காவல்துறையினர் வரம்பு மீறி நடந்து கொண்டதோடு சிஐடியு திண்டுக்கல் மாவட்டச் செயலாளரை குண்டுகட்டா கத் தூக்கிச் சென்று கைது செய்துள்ள னர். திங்களன்று பழனியில் திருப்பூர் மண்டல அரசு போக்குவரத்துக்கழக பேரவை இங்குள்ள தனியார் மண்ட பத்தில் நடைபெறவிருந்தது. இத னொரு பகுதியாக பேருந்து நிலையம் அருகே கொடி ஏற்றிவிட்டு மண்டபம் வரை நடந்து செல்ல போக்குவரத்து தொழிலாளர்கள் முயன்றனர். அதற்கு காவல்துறையினர் கொடிகள் இல்லா மல், கோஷமிடாமல் நடந்து செல்ல வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதித் தனர். காவல்துறையின் இந்த உத்தர வுக்கு சிஐடியு தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். தொடர்ந்து கொடியோடு செல்ல முயன்றனர். அப்போது காவல் துறையினர் சிஐடியு திண்டுக்கல் மாவட்டச்செயலாளர் கே.பிரபாகரனை சுற்றி வளைத்து அவரையும் மற்ற வர்களையும் குண்டுக்கட்டாக தூக் கிச்சென்று வேனில் ஏற்றினர். பின்னர் அனைவரையும் நிகழ்வு நடைபெறும் மண்டபத்தில் இறக்கிவிட்டனர். காவல்துறையின் இந்த நடவ டிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள் ளது. இது தொடர்பாக கட்சியின் மாவட்டச்செயலாளர் ஆர்.சச்சி தானந்தம் விடுத்துள்ள செய்திக்குறிப் பில், பழனி நகரில் கோவிலுக்குள் சென்று சங்பரிவார கும்பல் ஆர்ப் பாட்டம் நடத்த அனுமதி வழங்கப் படுகிறது. அறநிலையத்துறை வளா கத்திற்குள் சென்று ஆர்ப்பாட்டம் நடத்த வும் அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால் போக்குவரத்துத் தொழிலா ளர்கள் தங்கள் கோரிக்கையை மக்க ளுக்கு தெரிவிக்கும் வகையில் சாலை யில் நடந்து செல்லக்கூடாது என்று கூறி காவல்துறையினர் அனைவரையும் கைது செய்து மண்டபத்தில் கொண்டு சென்று இறக்கிவிட்டுள்ளனர். காவல்துறையின் இந்த நடவடிக்கை ஏற்கத்தக்க ஒன்றல்ல. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பழனி நகர் காவல்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் எனத் தெரிவித்துள்ளார்.