திண்டுக்கல், மே 20- பழனி அருகே அமரபூண்டியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்வுதளம் அமைத்துத் தரக் கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச்செயலாளர் பகத்சிங், ஒன்றிய நிர்வாகிகள் மணிகண்டன், கண்ணுச்சாமி, பாலக்குமார் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தையடுத்து ஒரு மாதத்திற்குள் சாய்வுதளம் அமைத்துத் தருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். (நநி)