districts

img

பரமக்குடி, திருவாடானை ஆகிய மையங்களில் அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக் கோரி இராமநாதபுரம், கடலாடி, பரமக்குடி, திருவாடானை ஆகிய மையங்களில் அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் புதனன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட தலைவர் மு.முருகேஸ்வரி, மாவட்டச் செயலாளர் சேகர் உள்ளிட்ட மாவட்டக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை, காரைக்குடி ஆகிய மையங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் பாண்டி உள்ளிட்ட மாவட்டக்குழு உறுப்பினர்கள், இடைக்கமிட்டி செயலாளர்கள் கலந்துகொண்டனர்.