districts

img

சிபிஎம் சார்பில் சிலிண்டருக்கு பாடை கட்டி ஆர்ப்பாட்டம்

மதுரை, மே 16- பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு, கேஸ் மானியத்தை ரத்து  செய்த ஒன்றிய அரசை கண்டித்து திங்க ளன்று மதுரை மாநகர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வடக்கு - 2 பகு திக்குழு சார்பில் சிலிண்டருக்கு பாடை கட்டி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  செல்லூர் - குலமங்கலம் ரோடு மீனாட்சிபுரம் மெயின் ரோட்டில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பகுதிக்குழு உறுப்பினர் எஸ்.கணேசன் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் பி.ராதா துவக்கி வைத்து பேசினார். பகு திக் குழு செயலாளர் ஏ.பாலு, மாமன்ற உறுப்பினர் டி.குமரவேல் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாநில குழு உறுப்பினர் இரா.விஜயராஜன் சிறப்புரையாற்றினார்.  ஆர்ப்பாட்டத்தில் மாவட்டக் குழு  உறுப்பினர்கள், பகுதிக்குழு உறுப்பி னர்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

;