மாவட்ட அளவில் நவீன மறு நில அளவை திட்ட பணிகளை தனி உதவி இயக்குநர்கள் தலைமையில் ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் ராணிப்பேட்டை மாவட்டம், முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே மாவட்டத் துணைத் தலைவர் ஆர்.பொன்னம்பலம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் மு.ஆனந்தபாபு, பொருளாளர் என்.அப்பு, கோட்டத் தலைவர் எம்.மோகன், அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகி கே.ரவி ஆகியோர் பேசினர்.