districts

மதுரை முக்கிய செய்திகள்

சிவகங்கை அரசு மருத்துவமனை சீர்கேட்டை  கண்டித்து இன்று சிபிஎம் சார்பில் ஆர்ப்பாட்டம்

சிவகங்கை, அக்.15-  சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை சீர்கேட்டை கண்டித்து, முறையான மருத்துவம் வழங்கிட வலியுறுத்தி திங்கள்கிழமை அக்டோபர் 16 அன்று  காலை 10 மணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சிவகங்கை மருத்துவக் கல்லூரி முன்பு ஆர்ப் பாட்டம் நடைபெற உள்ளது.  போராட்டத்தில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே. பாலபாரதி, மாநிலக்குழு உறுப்பினர்கள் எஸ்.ஸ்ரீதர், எஸ்.கே.பொன்னுத்தாய், மாவட்டச் செயலாளர் ஆர்.கே.தண்டியப்பன் மற்றும் மாவட்ட செயற்குழு, மாவட்டக்  குழு உறுப்பினர்கள், இடைக்கமிட்டி செயலாளர்கள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்க உள்ளனர். 

நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு  லோக் அதாலத்தில் உடனுக்குடன் தீர்வு

மதுரை, அக்.15-  நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிவுக்கு கொண்டுவரும் வகையில், ஆண்  டுக்கு 4 முறை லோக் அதாலத் என்ற மக்கள் நீதி மன்றம் நடத்தப்படுகிறது.  இதன்படி சனிக்கிழமையன்று மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மாவட்ட நீதிமன்ற முதன்மை அமர்வு நீதி பதி சிவகடாட்சம் அமர்வில்  லோக் அதாலத் நடை பெற்றது. இதில், செக் மோசடி, மோட்டார் வாகன விபத்து,  சிவில், தொழிலாளர்கள் போன்ற வழக்குகள் விசார ணைக்கு எடுக்கப்பட்டு, குடும்பநல வழக்குகள் நீதிபதி அனுராதா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்குகளில் இருதரப்பினருடன் நீதிபதிகள் பேச்சுவார்த்தை நடத்தி, இருதரப்பினரின் சம்மதத்துடன் மாவட்ட முழுவதும் இருந்து வரப்பட்ட பல்வேறு முடி வுக்கு கொண்டு வரப்பட்டது. இதேபோல் சில வழக்கு களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணங்களும் வழங்கப்பட்டது. லோக் அதாலத் மூலமாக முடிவு கிடைக்காத ஏராள மான வழக்குகளுக்கு சுமூகமான முறையில் உரிய தீர்வு  கிடைப்பதால் லோக் அதாலத்தில் ஏராளமானோர் தங்க ளது வழக்குகளை தாக்கல் செய்து வருகின்றனர்.

இரு சக்கர வாகனம் மாயம்

அருப்புக்கோட்டை, அக்.15- அருப்புக்கோட்டை அருகே உள்ள பந்தல்குடி அழகாபுரித் தெருவைச் சேர்ந்தவர் கருப்பையா(41). இவர்  தேநீர் கடை நடத்தி வருகிறார்.  இந்நிலையில், வழக்கம் போல கடை அருகே தனது  இரு சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு வேலை செய்துள்  ளார். திரும்பி வந்து பார்த்த போது, வண்டினை காண வில்லை. இதுகுறித்து பந்தல்குடி காவல் நிலையத்தில் கருப்பையா புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு  செய்த காவல்துறையினர் வாகனத்தை தேடி வருகின்றனர்.

உரிமம் இன்றி பட்டாசு  விற்பனை: 2 பேர் கைது

சாத்தூர், அக்.15- சாத்தூர் நகர் காவல்துறையினர் ரோந்துப் பணி யில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கோபாலபுரம் பேருந்து  நிறுத்தத்திற்கு பின் பகுதியில் அரசு அனுமதி மற்றும்  உரிமம் ஏதுமின்றி இருவர் சரவெடிகளை விற்பனை  செய்வது தெரிய வந்தது. இதையடுத்து, அவர்களி டமிருந்த பட்டாசுகளை பறிமுதல் செய்த காவல்துறை யினர், டி.கோட்டையுரைச் சேர்ந்த முத்துராஜ் (43),  தாயில்பட்டியைச் சேர்ந்த பாண்டியராஜ் (53) ஆகியோரை கைது செய்தனர்.

வெள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்பு 

திருவில்லிபுத்தூர், அக்.15- வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான கான்சாபுரம் அத்தி கோவில் ஆற்றுக்கு மேல்  உள்ள தர்காவில் மதுரை கூடல்நகரை சேர்ந்த சாஜுக் (48) என்பவர் தனது பேரன் மொட்டை எடுப்பதற்காக 70-க்கும்  மேற்பட்ட தனது உறவினர்களுடன் சனிக்கிழமையன்று வந்துள்ளார்.  இந்த நிலையில் மலைப்பகுதியில் திடீரென பெய்த மழையால் அத்தி கோவில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில், ஆற்றுக்கு மேற்புறம் உள்ள தர்கா வில் இருந்த 70-க்கும் மேற்பட்டோர் ஆற்றைக் கடக்க முடி யாமல் தவித்தனர்.  இதுகுறித்து கூமபட்டி காவல்துறையினர், வத்திரா யிருப்பு தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்  பட்டு, ஆற்றில் நீர் வரத்து குறைந்த பின், கயிறு மூலம்  சிக்கி இருந்தவர்களை அழைத்து வந்தனர்.

ரூ.11 லட்சம் மதிப்பில்  2 ஆழ்துளை கிணறுகள் மு.பூமிநாதன் எம்எல்ஏ துவக்கி வைத்தார் 

மதுரை, அக்.15-  மதுரை அனுப்பானடி 88 வார்டில் தெற்கு தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.11 லட்சம்  மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்ட 2 ஆழ்துளை கிணறுகளை சட்டமன்ற உறுப்பினர் மு.பூமிநாதன் சனிக்கிழமை அன்று  துவக்கி வைத்தார்.  அனுப்பானடி 88-வது வார்டு தெய்வகன்னி தெரு வில் ரூ.5.5 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணறு (போர்வெல்), கிறிஸ்தவ தெருவில் ரூ.5.5 லட்சம் மதிப்  பீட்டில் ஆழ்துளை கிணறு (போர்வெல்) ஆகியவற்றை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். நிகழ்வில், தெற்கு மண்டலத் தலைவர் மா. முகேஷ்சர்மா, மாமன்ற உறுப்பினர் மா.பிரேமா, மதிமுக  மாவட்டச் செயலாளர் எஸ்.முனியசாமி, அவைத்தலைவர் தி.சுப்பையா, உதவி செயற்பொறியாளர், உதவி பொறி யாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

விஏஓ மீது லாரி ஏற்றிக் கொல்ல முயற்சி: டிரைவர் கைது; லாரி பறிமுதல் 

திண்டுக்கல், அக்.15- திண்டுக்கல் மாவட்டம் ஆயக்குடி பொன்னிமலை சித்தன் கரடு பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளி யவர்களை மடக்கி பிடித்து லாரியுடன் விஏஓ காவல் நிலை யம் செல்ல முயன்றபோது, அவர் மீது லாரியை ஏற்றி கொல்ல முயற்சி நடைபெற்றுள்ளது. இதுகுறித்து மாவட்ட  எஸ்பி.பாஸ்கரன் உத்தரவின் பேரில் தனிப்படை காவல்  துறையினர் லாரி ஓட்டுநரை கைது செய்தனர். 

தோட்டக்கலை இணை இயக்குநர் ஆய்வு

திருவில்லிபுத்தூர், அக்.15- வேளாண் - உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண் பொறியியல் துறை மூலம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்  வளர்ச்சி திட்டத்தில் தரிசு நில தொகுப்புகள் கண்டறிந்து ஆழ் துளை கிணறு அமைத்து,  நுண்ணீர் பாசனம் நிறுவி பல்லாண்டு தோட்டக்கலை பயிர்கள் நடவு செய்யப்பட்டு வருகிறது.  இதன்படி விருதுநகர் வட்டாரத்தில் மூலிப்  பட்டி, சிவகாசி வட்டாரத்தில் ஆனையூர், வத்திராயிருப்பு வட்டாரத்தில் மூவரை வென்றான், திருவில்லிபுத்தூர் வட்டா ரத்தில் பனை பொருள் மதிப்பு கூட்டும் கூடா ரம் மற்றும் நிலையான கல் பந்தல் ஆகிய  பகுதிகளில் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட தரிசு நில தொகுப்புகளில் மேற்  கொள்ளப்படும் பணிகளை தோட்டக்கலை இணை இயக்குநர் தே.சந்தா செலின் மேரி  ஆய்வு செய்தார்.

ஒரே நாளில் 5 அடி உயர்ந்த பிளவக்கல் அணை நீர்மட்டம்

விருதுநகர், அக்.15- விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் மற்றும் வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் சனிக்கிழமையன்று மாலை திடீரென கன மழை பெய்தது. இதனால் அத்திகோவில் ஆறு, ராக்காச்சியம்மன் கோவில் பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் பாய்ந்தது. இந்தநிலையில், 47 அடி கொள்ளளவு கொண்ட பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டமானது, ஒரு நாள் பெய்த மழையில் 23 அடியில் இருந்து 28 அடியாக உயர்ந்துள்ளது. மேலும், தொடர்ந்து அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் வத்திராயிருப்பு பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு: 8,182 மாணவர்கள் எழுதினர்

விருதுநகர், அக்.15- விருதுநகர் மாவட்டத்தில் தமிழ் மொழி  இலக்கிய திறனறித் தேர்வு ஞாயிறன்று நடைபெற்றது. இதில், 8,182 மாணவ, மாண விகள் கலந்து கொண்டனர். தமிழகத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாண வர்கள் தமிழ் இலக்கியத் திறனாய்வு தேர்வு  எழுதி உதவித்தொகை பெறும் வாய்ப்பை தமிழ்நாடு அரசு அறிமுகம் செய்துள்ளது. மாணவ, மாணவிகள் தமிழ் மொழி இலக்கியத் திறனை  மேம்படுத்திக் கொள்  ளும் வகையில், இந்தத் தேர்வு நடத்தப்படு கிறது. தமிழ்நாடு முழுவதும் இத்தேர்வில் மாநில அளவில் வெற்றி பெறும் 1,500 மாண வர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை மூலம் மாதம் ரூ.1,500 வீதம் 2 ஆண்டுகளுக்கு உதவித் தொகை வழங்கப்படவுள்ளது.  எனவே, இந்தத் தேர்வை எழுதிட ஏராள மான மாணவ,மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். விருதுநகர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 27 தேர்வு மையங்களில் 8,182  மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு எழுதினர்.

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும்  பயிர் காப்பீடு தொகை வழங்க வேண்டும்

விவசாயிகள் சங்கம் ஆட்சியரிடம் மனு  சிவகங்கை, அக்.15-  சிவகங்கை மாவட்டத்தில் வறட்சியால்  பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயி களுக்கும் பயிர் காப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.  இதுதொடர்பாக சங்கத்தின் மாவட்டத் தலைவர் வீரபாண்டி, மாவட்டச் செய லாளர் மோகன் ஆகியோர் அளித்துள்ள  மனுவில், ‘‘சிவகங்கை மாவட்டத்தில் பர வலாக இளையான்குடி, காளையார் கோவில், மானாமதுரை, சிவகங்கை, தேவ கோட்டை ஆகிய பகுதிகளில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்  பீடு தொகை வழங்கப்படவில்லை.  பயிர்க் காப்பீடு செய்த 98 ஆயிரம்  விவசாயிகளில் 20 ஆயிரம் விவசாயி களுக்கு மட்டும் ரூ.69 கோடியே 74 லட்சத்து  38 ஆயிரம் இழப்பீடு தொகை வழங்கப் பட்டுள்ளது. பயிர்க்காப்பீடு தொகை பெரும்பாலான விவசாயிகளுக்கு கிடைக்க வில்லை.  இளையான்குடி தாலுகா சாலைக்கிரா மப் பகுதிகளில் பயிர்க்காப்பீடு கிடைக்க வில்லை. பயிர்க்காப்பீடு மிக சொற்பமான தொகை மட்டும் விவசாயிகளுக்கு வழங்கி  உள்ளனர். முழுவதும் வறட்சி பாதித்த பகுதி களில் வறட்சி நிவாரணம் பெற்ற விவசாயி களுக்கு பயிர்க்காப்பீடுத் தொகை கிடைக்க வில்லை.  எனவே, மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க் காப்பீடு கிடைப்பதற்கு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக் கூறப்பட்டுள்ளது.

ரேசன் அரிசி கடத்தியதாக  10 மாதங்களில் 1,144 வழக்குகள் பதிவு

ஐ.ஜி.ஜோஸிநிர்மல்குமார் தகவல் விருதுநகர், அக்.15- மதுரை மண்டலத்தில் ரேசன் அரிசி, பருப்பு, கேஸ் சிலிண்டர் மற்றும் உணவுப்  பொருட்கள் கடத்தியதாக 10 மாதங்களில்  1353 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு காவல்துறை தலைவர் கே.ஜோஸிநிர்மல் குமார் வெளி யிட்ட அறிக்கையில், ‘‘மதுரை மண்ட லத்தில் உள்ள விருதுநகர், மதுரை, சிவ கங்கை, இராமநாதபுரம், திண்டுக்கல், உத்த மபாளையம், தென்காசி, திருநெல்வேலி, குழித்துறை ஆகிய பகுதிகளில் காவல் துறை எடுத்த தொடர் நடவடிக்கை கார ணமாக 2023 அக்டோபர்  வரை மதுரை மண்டலத்தில் மட்டும் 1,353 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 448 பேர் கைது செய்  யப்பட்டுள்ளனர். அதில் ரேஷன் அரிசி கடத்தல் தொடர் பாக 1144 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 7,21,153 கிலோ (சுமார் 721 டன்) ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடத்தலுக்கு பயன்படுத்திய 140 இரு  சக்கர வாகனங்கள், 34 மூன்று சக்கர வாக னங்கள், 278 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 442 கடத்தல் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 237 சிலிண்டர் பறிமுதல் மேலும், வீட்டு உபயோக சமையல் எரிவாயுவை முறை கேடாக பயன்படுத்தியதாக 169 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 237 சிலிண்டர்கள் பறி முதல் செய்யப்பட்டுள்ளது. ரேஷன் பருப்பு  கடத்தல் தொடர்பாக 4 வழக்குகள் பதிவு  செய்யப்பட்டு 4623 கிலோ பருப்பு பறிமுதல்  செய்யப்பட்டுள்ளது. தண்டனை கேரளாவிற்கு ரேஷன் அரிசியை தொடர்ந்து கடத்திய 5 பேர் மீது குண்டர்  சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்  ளது. நீதிமன்ற விசாரணையில் உள்ள  வழக்குகளில் 236 வழக்குகள் முடிக்கப்பட்டு  தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட்டுள் ளது. தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வரும்  130 நபர்களில் 58 நபர்களுக்கு வருவாய்  கோட்டாட்சியர் அவர்களிடம் நன்னடத்தை பிணையம் பெறப்பட்டு நடவடிக்கை மேற்  கொள்ளப்பட்டுள்ளது. பறிமுதல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 437 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வரு வாய் அலுவலர் மற்றும் நீதிமன்றம் மூலம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.