districts

img

அகில இந்திய வேலை நிறுத்தத்தை ஆதரித்து டிஆர்இயு - சிஐடியு மதுரை கோட்டம் சார்பில் ஆர்ப்பாட்டம்

அகில இந்திய வேலை நிறுத்தத்தை ஆதரித்து டிஆர்இயு - சிஐடியு மதுரை கோட்டம் சார்பில் வியாழனன்று மேற்கு நுழைவுவாயில் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கோட்டத் தலைவர் எம்.சி.ஆன்ட்ரன் தலைமை வகித்தார். கோட்டச் செயலாளர் எம்.சிவக்குமார் முன்னிலை வகித்தார். மத்திய சங்க துணைத்தலைவர் ஹரிலால், மத்திய சங்க துணைப் பொதுச் செயலாளர் சுசோமனன், ஏ.ஐ.எல்.ஆர்.எஸ்.ஏ முன்னாள் கோட்ட செயலாளர் ஆர்.கண்ணன், ஏ.ஐ.இ.இ.ஏ பொதுச்செயலாளர் மீனாட்சிசுந்தரம், டிஆர்இயு கோட்ட உதவிச் செயலாளர் ஆர்.சங்கரநாராயணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஜெ.சவுந்திரராஜன் நன்றி கூறினார்.