districts

img

பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பாக மணிக்கூண்டு அருகே ஆர்ப்பாட்டம்

மாற்றுத்திறனாளிகள் மீது மேற்கு வங்க காவல்துறை நடத்திய தாக்குதலைக் கண்டித்து திண்டுக்கல்லில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பாக புதனன்று மணிக்கூண்டு அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச்செயலாளர் ஜெயந்தி தலைமை வகித்தார். மாவட்டச்செயலாளர் பகத்சிங், ஒன்றியச் செயலாளர்கள் கருப்புசாமி, ஆறுமுகவள்ளி, முத்துப்பாண்டி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.