திண்டுக்கல், ஏப்.28- மல்யுத்த வீராங்கனை களுக்கு பாலியல் துன் புறுத்தல் கொடுத்த பாஜக எம்.பியும் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரு மான பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்ய வேண்டும் என்று வலி யுறுத்தியும் பாஜக எம்.பி. க்கு எதிராக போராடும் மல் யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவு தெரிவித்தும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் இந்திய மாணவர் சங்கம் சார்பாக வெள்ளியன்று திண்டுக்கல்லில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் பேருந்து நிலையம் முன்பாக உள்ள எம்.ஜி.ஆர். சிலை முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாதர் சங்கத்தின் மாநில தலைவர் எஸ். வாலண்டினா கண்டன உரையாற்றினார். மாநில செயலாளர் ஜி.ராணி, மாவட்டச்செயலாளர் வே. பாப்பாத்தி, மாவட்டத் தலைவர் ஏ.சுமதி, வாலிபர் சங்க மாவட்டச்செயலாளர் கே.ஆர்.பாலாஜி, மாவட் டத்தலைவர் சிலம்பரசன், மாணவர் சங்க மாவட்டத் தலைவர் முகேஷ், மாவட்ட நிர்வாகிகள் தமிழ்செல்வன், நிருபன் ஆகியோர் பேசினர். இராஜபாளையம் இராஜபாளையம் ஜவ ஹர் மைதானத்தில் சிஐடியு நகர கன்வினர் சுப்பிர மணியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மாதர் சங்க மாவட்ட துணை தலைவர் ரேணுகா தேவி, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் ஜெயபாரத், கைத்தறி தொழிலாளர் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் ராமர், மாணவர் சங்க மாவட்ட தலைவர் பால்பாண்டி, சிபிஎம் நகர செயலாளர் மாரியப்பன், ராஜபாளையம் மேற்கு ஒன்றிய செயலாளர் சந்தன குமார் ஆகியோர் பேசினர்.