districts

img

பால் கொள்முதல் விலையை உயர்த்த வலியுறுத்தி மதுரையில் ஆர்ப்பாட்டம்

மதுரை, மார்ச் 21-  தமிழக அரசு - ஆவின் நிர்வா கம் பால் கொள்முதல் விலை யை உயர்த்த வேண்டும். குழந்தைகள் சத்துணவில் பால், பால்பவுடர் வழங்க வேண்டு மென வலியுறுத்தி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார் பில் திங்களன்று மதுரை ஆவின் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. தமிழக அரசு மற்றும் ஆவின் நிர்வாகம் பால் கொள்முதல் விலையை ஒரு லிட்டருக்கு ரூ.10 வீதம் உயர்த்த வேண்டும். பசும் பாலுக்கு ரூ.42, எருமை பாலுக்கு ரூ.51 வழங்கவேண்டும். ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 விற்பனை விலையை குறைத்ததால் ஏற் படும் இழப்பை ஈடுசெய்ய மாநில அரசு ரூ.300 கோடி ஆவின் ஒன்றி யங்களுக்கு வழங்க வேண்டும். நெருக்கடி காலத்தில் பால் பணம் உடனுக்குடன் வழங்க தமிழ்நாடு அரசு ரூ.500 கோடி சூழல்நிதியாக ஒதுக்க வேண்டும். பாலின் தரம், அளவு குறைவு ஆகியவற்றை தடுக்க, ஆரம்ப சங்கங்களைப் பாதுகாக்க ஆரம்ப சங்கங்களிலிருந்து பால்  குளிருட்டு வாகனம் மூலம் பாலை எடுக்கும்போது அளவு, தரம் ஆகி யவற்றை குறித்துக் கொடுக்க வேண்டுமென்ற மதுரை உயர்நீதி மன்ற உத்தரவை அமுல்படுத்த வேண்டுமென்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப் பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.  மதுரை மாவட்டத் தலைவர் ஏ.சி. வெண்மணிச்சந்திரன், மாவட்டச் செயலாளர் செ. முத்துப்பாண்டி, மாநிலப் பொதுச் செயலாளர் கே.முகமது அலி, தமிழக கூட்டுறவு சங்க ஊழி யர் சங்க மாவட்டப் பொதுச்செய லாளர் இரா.லெனின், மாவட்ட அமைப்பாளர் எஸ்.சாமிநாதன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.