districts

img

போலீசார் தாக்கி படுகாயமடைந்த நபரை அரசு மருத்துவமனையிலிருந்து வெளியேற்றி சிறையில் அடைப்பு

தேனி ,ஏப்.29- பெரியகுளத்தில் கடந்த 24 ஆம் தேதி நடந்த கல வரத்தின் போது காவல் துறையினரால் கொடூரமாக தாக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த முருகன் என்ப வரை குணமாகாமல் , அவ சரமாக வெளியேற்றி சிறை யில் அடைத்து அராஜகத்தில் ஈடுபட்ட மாவட்ட காவல் துறையைக் கண்டித்து  தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. தேனி மாவட்டம், பெரிய குளத்தில் அண்ணல் அம் பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற கல வரத்தின் போது காவல் துறையினர் நடத்திய கொடூர தாக்குதலில் கள்ளிப் பட்டியை சேர்ந்த   சன்னாசி மகன் முருகன் என்பவரின் இதய பகுதியில் உள்ள 4 விலா எலும்புகள் முறிவு ஏற் பட்டது. வலது கையில் மணிக்கட்டு உடைக்கப் பட்டு, சிறுநீரில் ரத்தம் வெளி யேறிய நிலையில் காவல் துறையினரால் பொய் வழக்கு போட்டு கைது செய்யப்பட்டு பெரியகுளம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது நீதிமன்றம், அவரை மருத் துவமனையில் அனுமதிக் கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டது .தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத் துவமனையில் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையில் இருந்த முருகனை ,சிகிச்சை முடி வதற்குள் காவல்துறை யினரின் தலையீட்டில் சனிக் கிழமை திடீரென தேக்கம் பட்டியில் உள்ள மாவட்ட சிறைச்சாலையில் அடைத் துள்ளனர்.

ஆர்ப்பாட்டம்

இது குறித்து தகவல றிந்த மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி ,தீண்டாமை ஒழிப்பு முன்னணி ,விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட அமைப்புகளின் தலைவர்கள் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் புகார்  அளித்து விட்டு ,மருத்துவ மனை முதல்வரை சந்திக்க சென்றனர். அவரும் சந்திக்க மறுத்து விட்டார். கொடூர தாக்குதல் நடத்தி யும் ,தொடர் சிகிச்சைக்கு அனுமதிக்காமல் சிறை யில் அடைத்த மாவட்ட காவல்துறையை கண்டி த்தும்,இதற்கு துணை போன தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்தும், முருகனுக்கு முறையாக சிகிச்சை அளிக்கக்கோரி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தீண்டாமை ஒழிப்பு முன் னணி மாநிலத் தலைவர் டி.செல்லக்கண்ணு தலைமை வகித்தார் .மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தேனி மாவட்டச் செயலாளர் ஏ.வி.அண்ணா மலை, மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.வெங்கடே சன், விடுதலை சிறுத்தை கள் கட்சியின் சார்பில் நாடாளுமன்ற தொகுதி செய லாளர் இரா.தமிழ்வாணன், ஆ.ஈஸ்வரன் ,அன்பு வடி வேல்,தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செய லாளர் இ.தர்மர் ,மாவட்டக் குழு உறுப்பினர் சவுந்தர பாண்டியன் ,ஆதித்தமிழர் பேரவை  மாவட்டச் செய லாளர் சுரேஷ் ,ஆதித் தமிழர் கட்சி மாவட்ட தலைவர் ராமசாமி, திராவிடர் கழக நிர்வாகிகள் வெங்கடேசன், முத்துச்சாமி, ஜெய் பீம் புரட்சி புலிகள் மாநில தலைவர் அருந்தமிழரசு, சமூக செயற்பாட்டாளர் மதியவன், வழக்கறிஞர் செல்வகுமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.