districts

img

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் சிவகங்கை முதன்மை கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் சிவகங்கை முதன்மை கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் இளமாறன் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் சுரேஷ் கண்ணா, மாவட்ட நிர்வாகிகள் செல்வகுமார், சிவக்குமார், தயானந்தன் ஆகியோர் பேசினர்.