districts

img

ஓய்வுபெற்றவர்களுக்கு நிலுவைத்தொகை கோரி ஆர்ப்பாட்டம்

சிவகாசி, ஜன.18- பிஎஸ்என்எல் பொதுத்துறை நிறு வனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஊழி யர்களுக்கு கூட்டுறவு சங்கத்திலிருந்து வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனே வழங்கிடக் கோரி  ஏஐபிடிபிஏ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிவகாசியில் உள்ள தொலைபேசி நிலை யத்தில் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு மணிவண்ணன் தலைமையேற்றார். துவக்கி வைத்து மாவட்ட செயலாளர் கே. புளுகாண்டி பேசினார். மாநில உதவித் தலைவர் எம்.பெருமாள்சாமி கண்டன உரை யாற்றினார். இதில் ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் எம்.முத்துச்சாமி, சிவ ஞானம், பொன்ராஜ் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.