மதுரை, டிச.22- மதுரை திருப்பரங் குன்றத்தில் பொதுமக்கள், மற்றும் குழந்தைகள் பள்ளிக் கூடங்களுக்கு நடந்து செல்ல பாதை இல்லாத நிலையில் ரயில்வே சுரங்க நடைபாதை, சர்வீஸ் ரோடு, திருப்பரங் குன்றம் கிராம நத்தம் சர்வே எண் 196/14,187 க்கு உட்பட்ட பகுதிகளில் நீண்ட காலமாக வசிக்கின்ற குடும்பங்க ளுக்கு பட்டா வழங்க வேண் டும் என்று வலியுறுத்தி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தாலுகாக்குழு உறுப்பினர் எஸ்.எம்.பாண்டி தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் இரா.விஜய ராஜன் உரையாற்றினார். திருப்பரங்குன்றம் தாலுகா செயலாளர் எம்.ஜெயக் குமார், மாவட்டக்குழு உறுப்பினர்கள் வி.ராஜ், என்.விஜயா மற்றும் முன்னாள் மாவட்டச் செயலாளர் சி. இராமகிருஷ்ணன், சி. வெண்புறா, ஏ.பி.பாண்டி, ஆர்.முத்துராமலிங்கம் ஆகி யோர் கலந்து கொண்டனர்.